காலையில் திருமண மாலை: மாலையில் கொலை: மணப்பெண் உயிரிழப்பு: ஒரு நாளில் என்ன நடந்தது…!?

Author: Sudha
8 August 2024, 12:40 pm

பல வருடங்கள் காதலித்து அன்பை பகிர்ந்து காத்திருந்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்ட சிலமணி நேரத்திலேயே மணமகளும் மணமகனும் ஒருவரையொருவர் கத்தியால் தாக்கிக் கொண்ட சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்த சம்பவத்தில் மணமகள் உயிரிழந்தார்.

கர்நாடகாவின் கோலார் மாவட்டம் செம்பரகானஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நவீன்குமார் தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார்.அதே பகுதியை சேர்ந்தவர் லிகிதா ஸ்ரீ இவர்கள் 2 பேரும் காதலித்து வந்தனர். நேற்று காலை இரு வீட்டார் சம்மதத்துடன் இவர்கள் திருமணம் நடந்தது. இதையடுத்து மதியம் புதுமணத் தம்பதிகள் இருவரையும் வீட்டில் இருந்த ஒரு அறையில் தனியாக வைத்தனர்.

அப்போது தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது தகராறில் ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்கி கொண்டனர். 2 பேரும் ரத்த காயத்தில் சுருண்டு விழுந்து கிடந்தனர். இதையடுத்து குடும்பத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் லிகிதா ஸ்ரீ உயிரிழந்தார்.இதையடுத்து குடும்பத்தினர் நவீன் குமாரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஆண்டர்சன் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான சில மணி நேரத்திலேயே புதுமண தம்பதிகள் ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்கி மணமகள் பலியானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!