ஆன்லைன் ரம்மி விவகாரம் ; ஆளுநரை சந்திக்கும் அமைச்சர் ரகுபதி.. இரு தினங்களில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு

Author: Babu Lakshmanan
22 November 2022, 1:00 pm

சென்னை ; ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் பெற ஆளுநரை சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்

சட்டத்துறையில் புதிய சட்டப் பட்டதாரிகளுக்கான தன்னார்வப் பயிற்சித் திட்டத்தை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய தமிழக அரசால் நிறைவேற்றப்பட்ட அவசர சட்டத்திற்கு அன்றைய தினமே ஆளுநர் ஒப்புதல் அளித்ததாக கூறினார்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சட்ட மசோதா குறித்து ஆளுநர் எந்த விதமான விளக்கமும் இதுவரை கேட்கப்படாத நிலையில், சட்டம் மசோதாவுக்கு ஒப்புதல் பெறும் நடவடிக்கையாக ஆளுநரை சந்திக்க இன்று அல்லது நாளை நேரம் கேட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

10% இட ஒதுக்கீடு தொடர்பாக திமுக மற்றும் இதர கட்சிகள் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்த அவர், வழக்கு விசாரணையின் போது தேவையான வாதங்களை அரசு முன்வைக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டு விளையாட்டு தொடர்பாக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவர் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் ரகுபதி, ஜல்லிக்கட்டு போட்டியை தொடர்ந்து நடத்த தேவையான வாதங்களை வழக்கு விசாரணையின் போது அரசு முன்வைக்கும் என்றும் குறிப்பிட்டார்.

  • supreme court said that thug life movie should not be ban for any cause படத்தை தடை செய்தது நியாயமா? தக் லைஃப்க்கு ஆதரவாக வந்த உச்சநீதிமன்ற உத்தரவு!