இப்படி பேசுறது பேஷனாகிருச்சு… கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமீன் ; பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு!!

Author: Babu Lakshmanan
1 September 2022, 11:50 am

பெரியார் சிலை குறித்து சர்ச்சை கருத்து கூறிய வழக்கில் சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

சென்னை மதுரவாயலில் நடந்த கூட்டத்தில் பேசிய இந்து முன்னணி நிர்வாகி கனல் கண்ணன், கடவுளே இல்லை என சொன்ன பெரியாருக்கு ஸ்ரீரங்கம் கோயில் முன்பு சிலை எதற்கு, அதை அகற்ற வேண்டும் என பேசியிருந்தார்.

சென்னை மதுரவாயலில் நடந்த கூட்டத்தில் பேசிய இந்து முன்னணி நிர்வாகி கனல் கண்ணன், கடவுளே இல்லை என சொன்ன பெரியாருக்கு ஸ்ரீரங்கம் கோயில் முன்பு சிலை எதற்கு, அதை அகற்ற வேண்டும் என பேசியிருந்தார்.

இதையடுத்து, அவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து சைபர் க்ரைம் போலீசார் அவரை தேடி வந்த நிலையில், புதுச்சேரியில் பதுங்கியிருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே, இந்த வழக்கில் ஜாமீன் கோரி கனல் கண்ணன் தாக்கல் செய்த மனுவை, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பின்னர், ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கனல் கண்ணன் சார்பில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. மேலும், விசாரணை அதிகாரி முன் 4 வாரங்கள் இருவேளையும் ஆஜராகி கையெழுத்திட உத்தரவிட்டதுடன்,
தேவையில்லாத கருத்துகளை பேசுவது பேசனாகி விட்டதாகவும், இனி இது போல பேச மாட்டேன் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய கனல் கண்ணனுக்கு உயர்மன்றம் உத்தரவிட்டது.

  • the reason behind top actors are absent in king kong daughter marriage function ஓடி ஓடி பத்திரிக்கை வச்சி ஒருத்தர் கூட வரல? கிங் காங் வீட்டுத் திருமணத்தில் தலை காட்டாத நடிகர்கள்!