ரூ.42 கோடி சொத்துகள் முடக்கம்…. அமைச்சர் பொன்முடிக்கு அதிர்ச்சி கொடுத்த அமலாக்கத்துறை!!

Author: Udayachandran RadhaKrishnan
18 July 2023, 7:14 pm

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடியிடம் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், அமலாக்கத்துறை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், அமைச்சர் பொன்முடிக்குச் சொந்தமான 7 இடங்களில் சோதனை நடத்தினோம். அவருக்குச் சொந்தமான ரூ.42 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சோதனையின் போது ரூ.81.7 லட்சம், ரூ.13 லட்சம் மதிப்பு வெளிநாட்டுப் பணம், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.41.9 கோடி நிரந்த வைப்புத்தொகை, ரூ.81.7 லட்சம் மதிப்புள்ள ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • supreme court said that thug life movie should not be ban for any cause படத்தை தடை செய்தது நியாயமா? தக் லைஃப்க்கு ஆதரவாக வந்த உச்சநீதிமன்ற உத்தரவு!