யாரோ சொல்லித்தான் தப்பா சொல்லிருக்காங்க.. முதல்முறையாக அமைச்சர் பிடிஆர் கூறிய கருத்து!

Author: Udayachandran RadhaKrishnan
3 June 2024, 4:19 pm

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் 101 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை சிம்மக்கல்லில் உள்ள கருணாநிதி சிலைக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

பின்னர் திமுகவினருக்கும் பொதுமக்களுக்கும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இனிப்புகளை வழங்கினார், நிகழ்வின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில், வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் நாளை வரும் நிலையில் அதன் முடிவுகளை கருத்து கணிப்பு எனும் பெயரில் முன்கூட்டியே கூறுவது ஏற்புடையதல்ல.

5 அல்லது 6 கருத்துக்கணிப்பு எடுக்கும் நிறுவனங்களை வைத்து கருத்துக்கணிப்புகள் எடுக்கப்பட்டுள்ளது, ,இந்திய வரலாற்றில் நடக்காத வகையில் மூன்று மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது.

கருத்துக் கணிப்புகள் எடுத்த நிறுவனங்கள் அச்சடித்தது போல ஒரே மாதிரியாக தேர்தல் முடிவுகளை வெளியிட்டுள்ளன, அறிவு சார்ந்த மக்கள் கருத்துக் கணிப்பு முடிவுகள் நம்ப முடியாதவையாத வகையிலும், ஏற்றுக்கொள்ள முடியாத வகையிலும் உள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் கருத்துக் கணிப்புகளில் உண்மையும், ஞானமும் இல்லை, ஒரு மாநிலத்தில் பாஜக 8 தொகுதிகளில் போட்டியிடுகிறது என்றால் அம்மாநிலத்தில் பாஜக 15 தொகுதிகளில் வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல ஒரு மாநிலத்தில் காங்கிரஸ் 8 தொகுதிகளில் போட்டியிடுகிறது என்றால் அம்மாநிலத்தில் 13 தொகுதிகளில் வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது,

யாரோ சொன்ன கட்டளையின்படி கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன, நாளை வெளிவரும் தேர்தல் முடிவுகளுக்கும் கருத்துக்கணிப்புக்கும் சம்பந்தமில்லாத வகையில் முடிவுகள் வெளிவரும், நாளை வெளிவரக்கூடிய தேர்தல் முடிவுகளை பொறுத்திருந்து பார்ப்போம்” என கூறினார்

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!