மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா… சட்டமன்ற நாளை தாக்கல் செய்ய உள்ளதாக முதலமைச்சர் அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
28 June 2024, 8:09 pm

தமிழக சட்டசபையில் மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல் செய்யப்பட உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் போதைப்பொருள் தொடர்பான தண்டனைகள் கடுமையாக்கப்பட உள்ளன.

போதைப் பொருள் விற்பனைகளுக்கான தண்டனை போதுமானதாகவும், கடுமையானதாகவும் இல்லை. தண்டனையைக் கடுமையாக்கி குற்றங்களை முற்றிலும் தடுக்க, முதற்கட்டமாகத் ‘தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937’-ல் திருத்த மசோதா ஒன்று நாளை சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக அறிவித்துள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!