தென்னிந்தியா முழுவதும் கால் பதிக்கும் விசிக… அத்தனையிலும் பானை சின்னத்தில் போட்டி : திருமாவளவன் முக்கிய அறிவிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
24 March 2024, 6:58 pm
thiruma
Quick Share

தென்னிந்தியா முழுவதும் கால் பதிக்கும் விசிக… அத்தனையிலும் பானை சின்னத்தில் போட்டி : திருமாவளவன் முக்கிய அறிவிப்பு!

கர்நாடகவில் இருந்து தமிழகத்திற்கு காவேரி நீரை திறப்பது குறித்து அந்த மாநில மக்கள் நலனை கருத்தில் கொண்டே முடிவு எடுக்கப்படும்

கர்நாடக மாநிலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்திய பின்பு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேச்சு

தமிழகத்தில் அதிமுகாவை தனிமைப்படுத்து தான் பாஜகவின் நோக்கம் எனவும் அதனை அதிமுகவும் உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேட்டி

சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அலுவலகத்தில் வருகின்ற நாாளுமன்ற தேர்தலில் ஆந்திரா, கர்நாடகா, கேரளம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டார்.

முன்னதாக புதிய உழைப்பாளர் கட்சி என்ற கட்சியை விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அறிமுகப்படுத்தினர். மறைந்த வன்னியர் தலைவர் ராமசாமி படையாச்சி மகன் ராமதாஸ் மகன் இந்த கட்சியை தொடங்கினார். இந்த கட்சி வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்திய கூட்டணியை ஆதரித்து பிராச்சாரம் மேற்கொள்ளும் எனவும் குறிப்பாக விசிக போட்டியிடும் இரண்டு தொகுதிகளிலும் பிரச்சார பணிகளை மேற்கொள்ளும் என கூறினார்.

இந்த கட்சி கொடியை அறிமுகப்படுத்திய பிறகு செய்தியாளர்கள் இடம் பேசிய விசிக தலைவர் தொல்.திருமாவளன்

அரசியலமைப்பு சட்டத்தின் பாதுகாப்பை கருதி இந்தியா கூட்டணியை ஆதரிக்கிறது. இந்த புதிய உழைப்பாளர் கட்சி புதிய அரசியல் இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். சமூக நீதியும், சமூக நல்லிணக்கமும் இந்த அரசியல் இயக்கத்தை முதன்மையான குறிக்கோள்கள் என கூறினார். சாமியின் பெயரால் இந்த மண்ணில் ஒரு சொட்டு ரத்தம் கூட சிந்த கூடாது. உழைக்கும் மக்களின் உழைப்பே சூரண்ட கூடாது. வன்முறை கூடாது சமூக நல்லிணக்கம் தேவை என்பதை இந்த முன்னெடுத்துகிறது. இந்த கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறது. ஓ பி சி மக்களும், ஒடுக்கப்பட்ட பூர்வீக குடிகளும், சிறுபான்மையினரும் சமூகநீதி இருந்தால் மட்டுமே சமூக நல்லிணக்கத்தை பேணுவதும் நோக்கம் என கூறினார்.இந்த கட்சி விரைவில் முதலமைச்சரையும் சந்திக்க இருக்கிறது என கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தொல்.திருமாவளவன் பேசியதாவது

கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் கடந்த நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் வேட்பாளர்கள் நிறுத்தினோம். கர்நாடகாவில் ஏற்கனவே 30 வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினோம். ஆனால் காங்கிரசுக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்பதற்காக வேட்பாளர்களை திரும்பி பெற்றோம் என கூறினார். ஆந்திராவில் மட்டும் தான் இந்தியா கூட்டணியில் சேர இருக்கிறோம். பிற மாநிலங்களில் அதற்கான சூழ்நிலை அமையவில்லை. விசிக போட்டியிடும் தொகுதிகள் ஆனது காங்கிரசுக்கு பாதிப்பு ஏற்படுத்தாதவாறு இருக்க வேண்டும் என முடிவெடுத்தோம். ஆந்திராவில் நாளை நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு நாடாளுமன்ற தொகுதிகளும் சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கையோடு இருக்கிறோம். அதற்கான சூழல் நடைபெறவில்லை என்றால் மாநில நிர்வாகிகள் கூடி அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார். தமிழ்நாடு தேர்தல் நடைபெற்ற பிறகு ஆந்திராவில் தேர்தல் நடைபெறுவதற்கு காலங்கள் உள்ளது அதற்குள் நாங்கள் முடிவெடுப்போம் என கூறினார். ஒவ்வொரு மாநிலங்களும் தனித்தனியாக தேர்தல் அறிக்கை தயார் படுத்திக் கொண்டிருக்கிறோம். காவேரி விவகாரத்தில் கர்நாடக மக்களின் நலனை கருத்தில் கொண்டு முடிவெடுக்கும் என தெரிவித்தார்.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜிரிவால் கைது சட்ட விரோதமானது. தோல்வி பயத்தால் பாஜக இவ்வாறு செயல்படுகிறது. எதிர்க்கட்சிகள் மீது அடக்கு முறையை ஏவுகிறது. இரண்டு முதலமைச்சர்களை கைது செய்து சிறைப்படுத்தி இருக்கிற பாஜகவில் பாசிசம் தலைவிரித்து ஆடுகிறது. என் டி ஏ கூட்டணிகள் சேர அச்சுறுத்துகிறது. பாஜக எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தே கூட்டணிகள் சேர்க்க வைக்கிறது. தேர்தல் பத்திரம் ஊழல் என்பது இதுவரை நிகழாத மிகப்பெரிய ஊழல். சட்டபூர்வமாக ஊழலை அங்கீகரித்து இருக்கிறது பாஜக. நல்ல வேலையாக உச்ச நீதிமன்றம் தலையிட்டு தேர்தல் பத்திரமூலம் பெற்ற நன்கொடை ஏற்புடையதல்ல என கூறி இருக்கிறது.

மிக முக்கியமான கார்ப்பரேட் நிறுவனங்களை, அரசியல் தலைவர்களை விசாரணை நிறுவனங்கள் மூலமாக அமலக்கத்துறை, வருவாய் வரித்துறை மூலமாக பாஜக அச்சுறுத்தி வருகிறது. இது பாசிசத்தின் உச்சம் எனக் கூறினார். தேர்தல் பத்திரத்தின் ஊழல் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர வைத்திருக்கிறது. அதிமுகவை பாஜக கூட்டணியில் இணைப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அவர்களால் 2019 ஆம் ஆண்டு உருவாக்கிய கூட்டணி போல உருவாக்க முடியவில்லை என கூறினார். அவர்கள் அதிமுகவை தனிமைப்படுத்துவது தான் நோக்கம். அதிமுகவும் இதை உணர்ந்து கொள்வது தேவையான ஒன்று என தெரிவித்தார்.

இந்த தேர்தல் இந்திய நாட்டு மக்களுக்கும் சன் பரிபார் கும்பலுக்கும் நடக்கும் தேர்தல் என கூறினார். தமிழ்நாட்டில் பிஜேபி ஒரு இடத்தில் வெற்றி பெற்றால் கூட அது சந்தேகத்தை ஏற்படுத்தும். பிஜேபி யில் அதிமுகவை கூட்டணியில் இணைத்து இருக்கலாம் ஆனால் தனித்து போட்டி யுடம் என்று விட்டுவிட்டார்கள்.

பாஜக இந்த தேர்தலில் அதிமுகவை விட வாக்கு சதவீதம் அதிகம் உள்ளது என்று நிரூபிக்க இந்த தேர்தலில் அவர்கள் தனித்து போட்டியிடுகின்றனர் என தெரிவித்தார்.

கர்நாடகவில் 6 தொகுதிகள்

கேரளாவில் 5 தொகுதிகள்

தெலுங்கானாவில் 10 தொகுதிகள்

மகாராஷ்டிராவில் 1 தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக பானை சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர்

ஆந்திர மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி உடன் சேர்ந்து போட்டியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது நாளை அந்த பேச்சுவார்த்தை நிறைவு பெறும் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

Views: - 124

0

0