உங்கள் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும்… வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்..!!

Author: Udayachandran RadhaKrishnan
13 May 2024, 10:17 am

உங்கள் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும்… வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்..!!

இன்று 4வது கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. அத்துடன் ஆந்திர மாநில சட்டசபை தேர்தலும் தொடங்கியது. காலை முதலே வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் தலம் மூலம் ஆந்திராவில் நடைபெறும் தேர்தலையொட்டி பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதில். இந்தியாவின் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் திருவிழா தேர்தல், ஆகையால் அனைவரும் தவறாமல் பெருவாரியாக ஓட்டளிக்க வேண்டும்.

மேலும் படிக்க: குன்னூரில் சாலையை மறித்த யானை கூட்டம்.. அரசு பேருந்தை ஓட்டுநர் திருப்பியதால் பயணிகள் ஷாக்!

இளைஞர்கள், பெண்கள், முதல் வாக்காளர்களுக்கு வாழ்த்துக்கள். உங்கள் ஓட்டு உங்கள் குரல் , இது ஓங்கி ஒலிக்கும்படியாக இருக்கும், இது தெளிவாக ஒலிக்கும் வகையில் இருக்கட்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!