வீட்டில் நிம்மதியே இல்ல… சாப்பிட உட்கார்ந்தாலே மன உளைச்சல் – இளையராஜா குறித்து பவதாரிணி வேதனை

Author: Rajesh
26 January 2024, 12:35 pm
ilayaraja daughter death
Quick Share

தமிழ் சினிமாவின் தலைமுறைக்கும் பேசும், பேசப்போகும் இசை அரசனாக பார்க்கப்படுபவர் இசைஞானி இளையராஜா. இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

bhavatharani

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் 1000த்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குறையாமல் வழங்குவதில் அவர் ஞானி.

இனிமையான பாடலுக்கு கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்துயிருக்கும் இளையராஜாவுக்கு கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா , பவதாரிணி என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் பவதாரிணி பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் இருந்து வந்தார். இதனிடையே அவர் நேற்று மாலை 5.20 மணிக்கு திடீரென மரணமடைந்துள்ளார்.

இந்த செய்தி ஒட்டுமொத்த திரையுலகினரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது . பாடகி பவதாரிணி கடந்த சில ஆண்டுகளாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து உயர்தர சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இதனிடையே “ஆயுர்வேத சிகிச்சை”க்காக குடும்பத்தினர் அவரை இலங்கைக்கு சென்ற நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி திடீரென மரணித்துள்ளார்.

இதையடுத்து பல்வேறு திரைபிரபலங்கள் பாடகி பவதாரிணியின் மரண செய்தி கேட்டு பேரதிர்ச்சிக்குள்ளாகிவிட்டனர். தொடர்ந்து இளையராஜா குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் பவதாரிணி சில நாட்களுக்கு முன் பேட்டி ஒன்றில் தனது அப்பா இளையராஜா குறித்து பேசியுள்ளது தற்ப்போது வைரலாகி வருகிறது.

அதாவது, என்னுடைய அப்பா ரொம்பவே ஸ்ட்ரிக்ட் என் அண்னன் கார்த்திக் ராஜாவிடம் இசை பற்றி நிறைய பேசுவார். அவரிடம் நிறைய கரெக்ஷன்ஸ் கூறுவார். ஆனால், தம்பி யுவன் மற்றும் என்னிடம் இசையை பற்றி நிறைய பேசமாட்டார். எப்போதுமே சாப்பிடும் போது டைனிங் டேபிளில் தான் இசை கம்போஸிங் பற்றி யுவன், கார்த்திக் இருவருமே அப்பாவிடம் பேசுவார்கள்.

அவர்கள் பேச ஆரம்பித்து விட்டால் போதும் எனக்கு ஒரே மன உளைச்சலாக மாறிவிடும். சகோதரர்களின் இசையில் உள்ள குறைகளை சுட்டிக் காட்டி கறாராக கரெக்ஷன்ஸ் கூறுவார். இந்த வரிகள் எல்லாம் வேண்டாம் நெகட்டிவாக இருக்கு என பல கரெக்‌ஷன்கள் சொல்வார். அந்த சமயத்தில் சாப்பிட கூட விடமாட்டாரங்களே என மிகுந்த மன உளைச்சலாக இருக்கும். அந்த இடமே ஒரு போர்க்களம் போல மாறிவிடும் என பவதாரிணி தனது பழைய பேட்டியில் பேசியிருந்தார். தற்போது அது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Views: - 334

0

0