நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்ற மாணவி திடீர் தற்கொலை.. சோகத்தில் ஆட்டோ ஓட்டுநரின் குடும்பம்!
Author: Udayachandran RadhaKrishnan25 July 2025, 6:56 pm
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட திருகாளி மேடு காமராஜர் தெருவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சாதிக் என்பவரின் மகள் சமீமா வயது 18 என்பவர் பிளஸ் டூ முடித்துவிட்டு இரண்டாவது முறையாக நீட் தேர்வு எழுதி அதில் 502 மார்க் எடுத்து வெற்றி பெற்று உள்ளார்.
இன்று தரவரிசைப் பட்டியல் வெளியான நிலையில் வரும் 30ஆம் தேதி கவுன்சிலிங் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தமக்கு அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற பயத்தில் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையும் படியுங்க: கணவரை பிரிந்த இளம்பெண் கர்ப்பம்.. ஏமாற்றிய காதலன்… புகார் கொடுத்தும் ஆக்ஷன் இல்லை என குற்றச்சாட்டு!
சமீமா அவர்களின் சடத்தை காவல்துறைக்கு தெரியாமல் மூடி மறைக்க உறவினர்கள் முயற்சித்துள்ளனர்.
தாலுகா காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததின்பேரில் சமீமா அவர்களின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றி காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் பிரோத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த சமீமா தனக்கு மருத்துவக் கல்லூரியில் இலவச இடம் கிடைக்காதோ என்ற பயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை உண்டாக்கியது.
