அமெரிக்காவை வாட்டும் பனிப்புயல்: 3 அடி உயரத்திற்கு படர்ந்துள்ள பனிப்பொழிவு…பெரும்பாலான மாகாணங்களில் அவசர நிலை அமல்..!!

Author: Rajesh
30 January 2022, 11:01 am

வாஷிங்டன்: கிழக்கு அமெரிக்காவில் உள்ள பல மாகாணங்களில் கடுமையான பனிப்புயலால் அவசர நிலை அறிவிக்கப்பட்டு வருகிறது.

அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக தலைநகர் வாஷிங்டன், பென்சில்வேனியா உள்ளிட்ட மாகாணங்களில் பலத்த காற்றுடன் இடைவிடாது பனி கொட்டி மக்களை உறைய வைத்து வருகிறது.

இதனால் வீடுகள், மரங்கள், வாகனங்கள் பனி மூடி வெள்ளை போர்வை போர்த்தியது போல காட்சியளிக்கின்றன. மேலும் சாலைகள் மற்றும் மேம்பாலங்களில் பனித்துகள்கள் குவிந்து கிடக்கின்றன.

இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் முடங்கியுள்ளது. கொட்டும் பனியை அகற்றும் பணியில் மக்களும், அரசும் ஈடுபட்டு வருகிறது. கடுமையான பனிப்புயலால் கிழக்கு அமெரிக்காவில் உள்ள பல மாகாணங்களில் அவசர நிலை அறிவிக்கப்பட்டு வருகிறது.

கடலோரப் பகுதிகளில் நாள் முடிவில் ஒரு அடி அளவில் மாசசூசெட்ஸின் சில பகுதிகளில் மூன்று அடிவரை பனிப் பொழிந்து வருகிறது. இதனால் 1,17,00க்கும் மேற்ப்பட்ட வீடுகளில் வசிக்கும் மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர். நியூயார்க் மற்றும் அண்டை மாகாணமான நியூஜெர்சியில் அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டுள்ளது.

நியூயார்க் கவர்னர் கேத்தி ஹோச்சுல், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு மாகாண மக்களைக் கேட்டுக் கொண்டார். மேலும் கிழக்குக் கடற்கரையில் உள்ள நகரங்களில் வசிக்கும் மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பனிப்படர்ந்த இடங்களில் இயந்திரங்கள் மூலம் பனி அகற்றப்பட்டு வருகின்றனர்.

  • I won't quit cinema.. even pregnancy is just a temporary break: Top actress சினிமாவை விட்டு விலகமாட்டேன்.. கர்ப்பம் ஆனால் கூட… டாப் நடிகை!