கடற்கரை கவர்ச்சிக்கு பலன் கிடைக்குமா..? அவர் படத்தில் நடிப்பதே திவ்யாபாரதிக்கு தீராத ஆசையாம்..!

Author: Rajesh
8 April 2022, 1:23 pm

தமிழ் சினிமாவில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில், வெளியான பேச்சிலர் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகமானவர்.

ஆண்-பெண் இடையிலான உறவுச்சிக்கலை காதலும், காமமும் கலந்த பாணியில் சுப்பு என்ற மார்டன் பெண்ணாக நடித்து, இளசுகளின் மனதை சிறகடித்து பறக்கவிட்டார். பேச்சிலர் படத்தில், இடுப்பு தெரிய சேலை, தம்மாத்துண்டு டிரவுசர், பிகினி போன்ற உடையில் கவர்ச்சி காட்டி இளசுகளின் தூக்கத்தை கெடுத்தார்.

முதல் படத்திலேயே தமிழ் இளசுகளின் நெஞ்சங்களில் நீங்காத இடம் பிடித்துள்ளார். இவருடைய கவர்ச்சிக்கு கை மேல் பலன் கிடைத்தது போல், தற்போது அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றனர்.

இணையத்தில் படு ஆக்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி ஹாட் புகைப்படங்களை வெளிட்டு, கவர்ச்சி காட்டி ரசிகர்களை தன் பக்கம் வைத்து கொண்டு வருகிறார். இந்நிலையில், தற்போது தனக்கு வெற்றிமாறன் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருப்பதாக தெரிவித்துள்ளார்.மேலும் கதைக்காக நான் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் போவேன் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், சில நடிகைகள் நடிக்கும் போது சில விஷயங்களை செய்வதற்கு தயங்குவார்கள், ஆனால் தான் அப்படி கிடையாது, ஒரு வேளை நாம் தயங்கினால், அது இயக்குனர்களின் கிரியேடிவிட்டியை தடுப்பது போல் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

  • vaibhav shared the incident on transfer 5000 rupees to premji gpay account இப்போ வரைக்கும் அந்த பணத்தை திருப்பி கொடுக்கலை- பிரேம்ஜியிடம் ஏமாந்த பிரபல நடிகர் ஓபன் பேட்டி…