11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… தாயின் 3வது காதல் மோகத்தால் நேர்ந்த துயரம்… கொடூரனுக்கு போலீசார் வலைவீச்சு!!

Author: Babu Lakshmanan
9 May 2022, 4:49 pm

கன்னியாகுமரி: மார்த்தாண்டம் அருகே 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த, அவரது தாயின் தகாத உறவு காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அடுத்துள்ள காயக்கரையை பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது மாமன் மகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. துணிக் கடையில் வேலை பார்த்து வந்த அந்த இளம்பெண், சில நாட்களில் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

பின்னர், நாகர்கோவிலில் ஒரு வாலிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 2-வது கணவரையும் பிரிந்த அந்த இளம்பெண், மணலிகரையைச் சேர்ந்த ஆத்து கோணம் சுனில் என்பவருடன் காட்டாத்துறை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

அவர்களுடன் முதல் கணவர் மூலம் பிறந்த 11 வயது சிறுமியும் வசித்து வந்தார். அந்தச் சிறுமியிடம் அவரது தாய் இல்லாத நேரத்தில் சுனில் தவறாக நடந்து உள்ளார். இளம்பெண் வேலைக்குச் சென்றதும் வீட்டில் இருந்த 11 வயது சிறுமியை 3 நாட்களாக சுனில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

மேலும், இதனை வெளியில் யாரிடமாவது கூறினால், உன்னையும், உன் அம்மாவையும் கொலை செய்து விடுவேன் என மிரட்டி உள்ளார். இருப்பினும், உடலில் வலி எடுத்ததால் சுனிலின் பாலியல் தொந்தரவு குறித்து தனது பாட்டியிடம் கூறி சிறுமி அழுதுள்ளார்.

இதுகுறித்து அவரது பாட்டி மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுனிலை தேடி வருகின்றனர்.

  • famous journalist criticize mani ratnam for muththa mazhai song ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…