தடுக்க முடியாத கஞ்சா கலாச்சாரம்… இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது… ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்..!!

Author: Babu Lakshmanan
24 June 2022, 2:43 pm

வேலூர் : வேலூர் அருகே இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த செதுவாலை பகுதியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் விரிஞ்சிபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சேகரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபரை நிறுத்தி சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், அவர் வேலூர் கொணவட்டத்தை சேர்ந்த நரேஷ்குமார் என்பதும் அவர் வைத்திருந்த பையில் கஞ்சா பொட்டலங்கள் இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் நரேஷ்குமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

நரேஷ்குமார் யாரிடம் இருந்து கஞ்சா வாங்கினார், அதனை எங்கு கொண்டு செல்கிறார் என்பது குறித்து விசாரித்து வருவதாக விரிஞ்சிபுரம் போலீசார் தெரிவித்தனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!