இதென்ன பள்ளிக்கூடமா? பார்க்கிங் ஏரியாவா? மாநகராட்சி பள்ளி நுழைவு வாயிலில் வாகனங்களை நிறுத்தும் வாகன ஓட்டிகள் : மாணவர்கள் அவதி!!

Author: Udayachandran RadhaKrishnan
19 July 2022, 12:51 pm

இப்படி பள்ளியை மறித்து வாகனம் நிறுத்தினால் நாங்கள் எப்படிப்பா பள்ளிக்குள் நுழைவது?? என்பது போல ஆகிவிட்டது மாநகராட்சி பள்ளி நுழைவு வாயில்.

கோவை Dr. நஞ்சப்பா சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளி முன்பு நான்கு சக்கர வாகனம் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகள் பள்ளியுனுள் செல்ல பெரும் சிரம படுகின்றன.

பள்ளியின் எதிர்புறம் உள்ள கடைகளுக்கு உதிரிபாகம் இறக்குவதற்காக சரக்கு லாரிகளை பள்ளியின் முன்பு நிறுத்திக் கொண்டு இறக்கி வருகின்றனர். மேலும் போக்குவரத்து நெரிசல் உள்ள இடமாக இருப்பதால் பள்ளி மாணவ மாணவிகள் பாதுகாப்பாக செல்ல போக்குவரத்து காவல் துறை சார்பில் பாதுகாப்பு அளித்திட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!