எதுக்கு இந்த கண்துடைப்பு..? கேமரா முன் மட்டுமே திமுகவின் சமூக நீதி : வீடியோ பதிவிட்டு ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய அண்ணாமலை!!

Author: Udayachandran RadhaKrishnan
3 September 2022, 9:38 pm

திமுகவின் சமூக நீதி கேமராமுன் மட்டுமே என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து வீடியோவுடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர்,
திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயத்தில் திமுக எம்பி கதிர் ஆனந்த் அவர்கள் பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பேரூராட்சி தலைவரை மேடைமேல் அமர்த்தாமல் அவமதித்துள்ளனர்.

இதனால் செய்தியாளர்களுக்கு முன்பு முற்றிய வாக்குவாதங்களால் கண்துடைப்பு நடவடிக்கையாகப் பேரூராட்சி தலைவரை மேடையில் ஏற்றினார்கள்.

கேமராக்களுக்கு முன்பு மட்டுமே திமுகவின் சமூக நீதி நிலைநாட்டப்படும் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகி உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!