‘ஆனாலும், இம்புட்டு கோபம் ஆகாது-மா’… சுத்தியல் எடுத்து வந்து பேருந்து கண்ணாடியை உடைக்க வந்த பெண் ; பேருந்துநிலையத்தில் பரபரப்பு!!

Author: Babu Lakshmanan
7 January 2023, 2:25 pm

வேலூர் ; பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிற்காத ஆத்திரத்தில் பேருந்து கண்ணாடியை உடைக்க சுத்தியுடன் வந்த பெண்ணால் ஒடுக்கத்தூர் பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

குடியாத்தம் பகுதியில் இருந்து இரவு 7 மணி அளவில் அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றுக்கொண்டு ஒடுக்கத்தூர் நோக்கி புறப்பட்டது. பின்னர், இரவு 8.30 மணி அளவில் ஒடுகத்தூர் பேருந்து நிலையம் அருகே பேருந்து வந்து கொண்டு இருந்தது. அப்போது பேருந்து நிலையம் திரும்ப வளைவில் அரசு பேருந்து நிற்கவில்லையாம். இதனால், அந்த பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவர் ஏன் வளைவில் பேருந்து நிற்கவில்லை.

நான் அங்குதான் இறங்க வேண்டும் என்று நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரிடம் நடத்துனர் அங்கு பேருந்து நிறுத்தம் கிடையாது. நான்கு மணி சந்திப்பில் தான் நிற்கும் என்று எடுத்துக் கூறினார். ஆனால், அதை எதையுமே காதில் வாங்காத, அந்த பெண் நாங்களும் ரவுடிதான் பாணியில் திடீரென கையில் சுத்தியுடன் வந்து அதெல்லாம் எனக்கு தெரியாது.

நீங்கள் சம்பளம் வாங்குறீங்க இல்ல, எனக்கு அந்த இடத்தில் தான். இறங்கனும் எப்படி வேறு இடத்தில் இறக்கிவிடலாம், என்று கூறியபடி பேருந்து கண்ணாடியை உடைப்பது போல் ஆபாசமாக பேசினார்.

ஆனாலும், அந்த பெண்ணிடம் எவ்வளவு கூறியும், அவரின் கோபம் அடங்கவில்லை. பின்னர் ஒரு கட்டத்தில் அங்கிருந்தவர்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுக்க தொடங்கி விட்டனர். இதனை கவனித்த அந்த பெண் அங்கிருந்து சென்று விட்டார். இந்த சம்பவத்தால் அங்கு நீண்ட வரிசையில் பேருந்து வேன் போன்ற வாகனங்கள் வரிசை கட்டி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

  • why police did not arrested virat kohli for 11 death in rcb celebration அல்லு அர்ஜூனை கைது பண்ணீங்க, விராட் கோலியை கைது பண்ணீங்களா? கிடுக்குப்பிடி கேள்வி கேட்ட கூல் சுரேஷ்