பாஜக முக்கியப் புள்ளி அதிமுகவில் இணைந்தார் : தமிழக அரசியலில் திடீர் ட்விஸ்ட்!!!

Author: Udayachandran RadhaKrishnan
5 March 2023, 2:35 pm

அரசியல் பொறுத்தவரை ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு தாவுவது சாதாரண சம்பவமாக மாறிவிட்டது.

அப்படித்தான் தற்போது தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருவது. பாஜகவின் முக்கிய நிர்வாகியான சிடிஆர் நிர்மல்குமார் அதிமுகவில் இணைந்துள்ளார்.

இன்று காலை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார்.

இந்த நிலையில் பாஜகவில் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல்குமார், அக்கட்சியில் இருந்து விலகுவதற்கான காரணத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், பாஜக சகோதர சகோதரிகளுக்கு வணக்கம்‌. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பலநூறு முறை சிந்தித்து இன்று நான்‌ பாஜகவின்‌ அனைத்து பொறுப்புகளில்‌ இருந்தும்‌ ராஜினாமா செய்கிறேன்‌. பல ஆண்டுகளாக எந்த வித எதிர்பார்ப்பும்‌ இல்லாமல்‌ உண்மையாக, நேர்மையாக கட்‌சியின் வளர்ச்சிக்காக என்னால்‌ முடிந்த வரை
பணியாற்றினேன்‌ இன்று விடைபெறுகிறேன்.

என்‌ மீது நம்பிக்கை வைத்து என்னுடன்‌ பயணித்த உங்களிடம்‌ எனது இந்த முடிவிற்கான காரணத்தை தெரிவிப்பது எனது கடமை, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழக பாஜக தலைமை தொண்டர்களையும்‌ கட்சியையும்‌ செருப்பாக பயன்படுத்தி கட்சியை பற்றி துளியும்‌ சிந்திக்காது. சொந்த கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும்‌ வேவு பார்த்து ஆனந்தம்‌ அடைவதை போன்ற அல்பத்தனம்‌ எதுவும்‌ இல்லை. அதையும்‌ தாண்டி தன்னை நம்பி இருக்கும்‌ தொண்டர்கள்‌, கட்சி மற்றும்‌ கமலாலயத்தின்‌ ஒவ்வொரு செங்களையும்‌ வியாபாரமாக்கி இடத்திற்கேற்ப நடித்து ஏமாற்றி வரும்‌ தலைமையை பார்த்து ஒவ்வொரு நாளும்‌ வேதனை அடைந்தது தான்‌ மிச்சம்‌.

தொண்டர்களை மதிக்காது தான்தோன்றி தனம்‌ இவற்றுடன்‌ “மனநலம்‌ குன்றிய” மனிதரை போல்‌ செயல்படும்‌ நபரால்‌ கட்சு அழிவை நோக்கி செல்வதை ஒவ்வொரு நாளும்‌ பார்க்க முடிகிறது. 2019ல்‌ இருந்த கட்சி அமைப்பில்‌ தற்போது 20% கூட இல்லை அதைப்பற்றி துளியும்‌ கவலை இல்லாமல்‌ மாய உலகத்கில்‌ சுற்றி வரும்‌ ஒரு நபரால்‌ கள எதார்த்தத்தை என்றும்‌ உணர முடியாது, அதை உணர்த்த முயன்று என்னை போன்று பலர்‌ தோல்வியுற்றோம்‌.

எல்லாவற்றிற்கும்‌ மேலாக நான்‌ ஒரு அமைச்சருடன்‌ கடுமையான சட்ட போராட்டம்‌ நடத்தி வரும்‌ நிலையில்‌ அந்த அமைச்சரை வெளியில்‌ வீராவேசமாக பேசிவிட்டு திரைமறைவில்‌ பேரம்‌ பேசும்‌ நபருடன்‌ எப்படி பயணிக்க முடியும்‌?

மொத்தத்தில்‌ திராவிட மாடல்‌ அமைச்சர்களேயே மிஞ்சும்‌ அளவிற்கு ஒரு 420மலை-யாக இருக்கும்‌ நபரால்‌ தமிழக பாஜகவிற்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே மிகபெரிய கேடு. தன்னை நம்பி இருக்கும்‌ தொண்டர்கள்‌ மற்றும்‌ கட்சியை ஏமாற்ற நினைக்கும்‌ ஒரு தலைமையை நம்பி எப்படி பயணிக்க முடியும்‌? உங்கள்‌ சகோதரன்‌,
ரா. நிர்மல்‌ குமார்‌ என பதிவிட்டுள்ளார்.

இது பாஜகவிற்கு பேரிடியாக அமைந்துள்ளது. அண்ணாமலை திமுகவின் தோளை உரித்து கொண்டிருக்கிறார் என அரசியல் விமர்சகர்களால் கூறப்பட்டு வரும் நிலையில் பாஜகவில் இருந்த முக்கிய நிர்வாகி, அண்ணாமலை பற்றி பல விஷயங்களை கூறியுளள்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!