கடற்கரையில் கிடந்த மர்ம வெடிபொருள்… திருச்செந்தூர் முருகன் கோவிலில் பரபரப்பு.. அதிர்ச்சியில் பக்தர்கள்…!!

Author: Babu Lakshmanan
11 March 2023, 3:47 pm

திருச்செந்தூர் ; திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் மர்ம வெடிபொருளை கோவில் காவல் நிலைய போலீசார் கைப்பற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் இன்று பக்தர்கள் வழக்கம்போல் கடலில் புனித நீராடிக் கொண்டிருந்தனர். அப்பொழுது கோவில் நாழிகிணறு கடற்கரை பகுதியில் வெடிகுண்டு போல தோற்றம் அளிக்கக்கூடிய வெடிபொருள் ஒன்று கிடந்தது.

இது குறித்து பக்தர்கள் கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த வெடிபொருளை கைப்பற்றினார். இது நாட்டு வெடிகுண்டா? அல்லது திருவிழாவின் போது போடப்பட்ட வெடி பொருளா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பக்தர்கள் அதிகம் திரண்ட பகுதியில் மர்ம பொருள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் திருச்செந்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • the reason behind rj balaji changed his name as rjb அந்த நடிகை சொன்ன ஒரே காரணத்தால் தனது பெயரையே மாற்றிக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! இதான் விஷயமா?