ஆசிட் வீசி தப்பியோடியவரை விரட்டி பிடித்த பெண் காவலருக்கு பாராட்டு : வெகுமதி வழங்கி கவுரவித்த எஸ்பி!!

Author: Udayachandran RadhaKrishnan
23 March 2023, 5:12 pm

கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சூலூர் கண்ணம்பாளையம் பகுதி சேர்ந்த பெண் மீது அவரது கணவர் சிவா என்பவர் ஆசிட் வீசி தப்பி ஓட முயற்சி செய்தபோது அவ்விடத்திலிருந்த ஆனைமலை காவல் நிலைய பெண் தலைமை காவலர் திருமதி. இந்துமதி விரைவாக செயல்பட்டு குற்றவாளியை பிடித்தார்.

இதையடுத்து மாவட்ட காவல் அலுவலகத்தில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பத்ரிநாராயணன் பெண் தலைமை காவலர் இந்துமதியின் வீர தீர செயலை வெகுவாக பாராட்டி ரூ.5000/-பண வெகுமதி வழங்கினார்.

  • h vinoth will have high chances to direct rajinikanth movie விஜய் படத்தை டைரக்ட் பண்ணாலே இப்படித்தான்! ஹெச்.வினோத்தின் நிலைமையை பாருங்க?