ஆருத்ரா மோசடி வழக்கில் பரபரப்பு திருப்பம்… முக்கிய பிரமுகர் அதிரடி கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
21 April 2023, 1:40 pm

ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனத்தில், பொதுமக்களிடம் ஒரு லட்ச ரூபாய் பணம் கட்டினால் மாதம் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாக கூறிய கவர்ச்சிகரமான விளம்பரங்களை கூறி மோசடி செய்ததாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆருத்ரா நிதி நிறுவனம் மற்றும் அதன் தொடர்புடைய இடங்களில் தமிழகம் முழுவதும் 26 இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

மேலும், இந்த விவகாரத்தில், பாஜக விளையாட்டு பிரிவு மாநில செயலாளராக உள்ள ஹரிஸ், அந்த நிறுவனத்தின் மற்றொரு இயக்குனரான மாலதி உள்ளிட்ட சிலரை கைது செய்தனர். மேலும், ஆருத்ரா நிதி நிறுவன வசதி வழக்கில் நடிகர் ஆர் கே சுரேஷ் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 12ம் தேதி இந்த மோசடி வழக்கில், பாஜக பிரமுகர் அலெக்ஸ் விசாரணைக்காக சென்னையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார். முன்னதாக, பாஜக வழக்கறிஞர் பிரிவு அலெக்ஸ் மற்றும் சுந்தர் ஆகிய இரண்டு பேர் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அலெக்ஸ் மட்டுமே ஆஜராகியுள்ளார்.

அந்த வகையில், ஆருத்ரா நிதி நிறுவன இயக்குனர்களில் ஒருவரான ஹரிஷ் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பாஜக வழக்கறிஞர் பிரிவு அலெக்ஸிடம் விசாரணை நடத்தப்படுகிறது. இந்த விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

தற்போது, ஆருத்ரா கோல்ட் நிறுவன மோசடி வழக்கில் காஞ்சிபுரம் கிளையில் இயக்குநராக உள்ள ராஜா செந்தாமரை என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரத்தில், 200க்கும் மேற்பட்டோரிடம் சுமார் 1600 கோடி ரூபாய் முதலீடாக பெற்றது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

  • vaibhav shared the incident on transfer 5000 rupees to premji gpay account இப்போ வரைக்கும் அந்த பணத்தை திருப்பி கொடுக்கலை- பிரேம்ஜியிடம் ஏமாந்த பிரபல நடிகர் ஓபன் பேட்டி…