பாஜக மாவட்ட தலைவி கொடூரக் கொலை… சாலையில் வீசப்பட்ட உடல் ; பயங்கர சம்பவம் குறித்து போலீசார் விசாரணை

Author: Babu Lakshmanan
12 June 2023, 6:17 pm

பாஜக மாவட்ட தலைவி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சாலையில் வீசப்பட்டு சென்ற சம்பவம் அசாமில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோபால்புரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜோலினி நாத். இவர் பாஜக மாவட்ட செயலாளராக இருந்து வந்தார். இந்த நிலையில், கோபால்புரா மாவட்டம் சல்பரா பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பெண் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

விசாரணையில், உயிரிழந்தவர் பாஜக மாவட்ட செயலாளர் ஜோலினி நாத் என்பது தெரியவந்தது. இதையடுத்து, ஒரு அரசியல் கட்சி பிரமுகர் கொலை செய்யப்பட்டிருப்பது போலீசாரிடையே பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

மேலும், ஜோலினி நாத்தை படுகொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • 5 consitions to aamir khan in the release of sitaare zameen par movie படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?