தமிழக போலீசாருக்கு அனுமதி மறுப்பு… அதிவிரைவுப் படை கட்டுப்பாட்டில் மருத்துவமனை ; சென்னையில் பரபரப்பு!!

Author: Babu Lakshmanan
14 June 2023, 8:19 am

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அவரது தலைமை செயலகத்தின் அறையில் அமலாக்கத்துறையினர் நேற்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையை தொடர்ந்து, அவரது வீட்டின் முன்பாக துணை ராணுவப் படையினர், அதிவிரைவு படையினர் என அடுத்தடுத்து குவிக்கப்பட்டனர்.

சுமார் 17 மணிநேரம் நடந்த இந்த சோதனைக்கு பிறகு அதிகாலை 3 மணியளவில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தனர். மேலும், நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்ல முயன்றனர். அப்போது, அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

நெஞ்சில் கைவைத்தபடி அவர் காரில் மருத்துவமனைக்கு அப்போதே அழைத்துச்செல்லப்பட்டார். இதையடுத்து, அவர் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்படுவாரா, கைது நடவடிக்கையா என பரபரப்பு எழுந்தது. இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனையின் முன்பு திமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் ஆதரவாளர்கள் குவிந்து வருகின்றனர்.

இந்த நிலையில், பாதுகாப்பு பணிகளில் சிஆர்பிஎப் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். மொத்த மருத்துவமனையும் அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தப் பாதுகாப்பு பணிக்கு தமிழக காவல்துறையை அழைக்கவில்லை.

  • actress madhoo talked about forced kiss scene while she was acting as a heroine வற்புறுத்தி முத்தக்காட்சியில் நடிக்க வச்சாங்க, ஆனா?- மனம் நொந்துப்போய் பேசிய மதுபாலா!