இன்றும் அதிரடியாக சரிந்து தங்கம் விலை… 13 நாட்களில் ரூ.2,080 சரிவு ; இன்ப அதிரிச்சியில் வாடிக்கையாளர்கள்..!!

Author: Babu Lakshmanan
3 October 2023, 10:40 am

பங்குச்சந்தை வீழ்ச்சி அடையும்போது, தங்கத்தின் விலை உயருகிறது. அதற்கு காரணம், பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள், அதை மாற்றி தங்கத்தில் முதலீடு செய்வதுதான். உதாரணமாக கடந்த ஆண்டு ரஷியா – உக்ரைன் போர் நடந்தபோது, பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்தது.

அதன் தாக்கம் தங்கத்தில் எதிரொலித்தது. அதாவது தங்கத்தின் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்தது. ஒரு பவுன் (8 கிராம்) தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை கடந்து, இல்லத்தரசிகளை அதிர வைத்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்கம் விலை மேலும் அதிகரித்தது. கடந்த ஜனவரி 1-ந்தேதி, ரூ.41 ஆயிரத்தை கடந்த ஒரு பவுன் தங்கம் விலை, தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது.

ரூ.45 ஆயிரம், ரூ.46 ஆயிரம் என்று புதிய உச்சத்தை நோக்கி தங்கம் விலை (ஒரு பவுன்) உயர்ந்தது. இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டில், தங்கத்திற்கான இறக்குமதி வரியும் உயர்த்தப்பட்டது. இதனால், தங்கம் விலை மேலும் உயரும் வாய்ப்பு இருந்தது. இருப்பினும், தங்கம் விலை உயர்ந்தும், சரிந்தும் காணப்பட்டது.

இந்த நிலையில், காந்தி ஜெயந்தி விடுமுறை தினமான நேற்று (அக்.02) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.32 குறைந்து, ரூ.42,848-க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், சென்னையில் இன்று (அக்.03) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.528 குறைந்து, ரூ.42,320-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.66 குறைந்து ரூ.5290-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.2 குறைந்து ரூ.73.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.500 குறைந்து ரூ.73,500-க்கு விற்பனையாகிறது.

கடந்த 13 நாட்களில் மட்டும் தங்கம் சவரனுக்கு ரூ.2,080 சரிந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

  • why police did not arrested virat kohli for 11 death in rcb celebration அல்லு அர்ஜூனை கைது பண்ணீங்க, விராட் கோலியை கைது பண்ணீங்களா? கிடுக்குப்பிடி கேள்வி கேட்ட கூல் சுரேஷ்