ஆம்பளையாக இருந்தால்… அண்ணாமலைக்கு நேருக்கு நேர் சவால் விட்ட சீமான்…!!

Author: Babu Lakshmanan
24 May 2024, 7:59 pm

நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியை விட பாஜக அதிக ஓட்டுக்களை வாங்கினால், கட்சியை கலைத்து விடுவதாக சீமான் சவால் விட்டுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழர்களை திருடர்கள் போல சித்தரித்து மோடி பேசுவதாகவும், இதுபோன்ற பேச்சை ஏப்ரல் 19ம் தேதிக்கு முன்பே பேசியிருக்க வேண்டியதுதானே எனக் கேள்வி எழுப்பினார்.

மேலும் படிக்க: குடியரசு தலைவருக்கே இந்த நிலைமையா..? இதுதான் பாஜக ஆட்சி ; கோபத்தில் கொந்தளித்த கனிமொழி..!!!

மேலும், தென் மாநிலங்களில் பா.ஜ.க, தவிர்க்க முடியாத சக்தியாக வரும் என அண்ணாமலை பேசுவதாகவும், அவர், தனித்து நின்று போட்டியிட்டு காட்டட்டும் என்று கூறிய அவர், ஜூன் 4ல் வெளியாகும் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளில் பா.ஜ., என்ற தனிக்கட்சியாக பெற்ற ஓட்டுகள், நாம் தமிழர் கட்சியை விட கூடுதலாக பெற்றால், நான் கட்சியை கலைத்துவிடுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், யார் பெரிய கட்சி என்பது அப்போது தெரியும் என்றும், அவர்களின் கூட்டணியாக ஓட்டை கணக்கிடக்கூடாது, என தெரிவித்துள்ளார்.

  • 5 consitions to aamir khan in the release of sitaare zameen par movie படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?