கஞ்சா பிடியில் சிக்கும் இளைஞர்கள்.. விடுதிகளில் போலீசார் நடத்திய சோதனையில் 30 மாணவர்கள் கைது..!

Author: Vignesh
31 August 2024, 9:23 am

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியை சுற்றியுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கியுள்ள விடுதிகளில், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கம் பெருமளவில் இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் 500 மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையில், போதை மாத்திரைகள், கஞ்சாவுக்கு பயன்படுத்தக்கூடிய போதை பொருட்கள், பாங்கு போதை வஸ்து உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதில், கல்லூரியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீஸ் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

  • vijay is bjp c team explained by vanathi srinivasan விஜய் பாஜகவோட C team? தவெக குறித்து ஓபனாக போட்டுடைத்த பிரபலம்!