ரெட் ஜெயன்ட் நிறுவனத்திடம் இருந்து எஸ்கேப் ஆக ரஜினிகாந்த் போட்ட பக்கா பிளான்? பலே ஆளு சார் நீங்க…
Author: Prasad12 June 2025, 6:32 pm
ரஜினிகாந்தின் சுயசரிதை
லோகேஷ் கனகராஜ்ஜின் “கூலி” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள ரஜினிகாந்த் தற்போது நெல்சனின் “ஜெயிலர் 2” திரைப்படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான “ஜெயிலர்” திரைப்படம் மாஸ் ஹிட் அடித்த நிலையில் தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இதனிடையே “ஜெயிலர் 2” திரைப்படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் 6 மாதங்கள் சினிமாவில் இருந்து ஓய்வெடுக்கப்போகிறார் எனவும் அந்த 6 மாத இடைவெளியில் தனது சுயசரிதையை எழுதவுள்ளார் எனவும் ஒரு தகவல் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இந்த நிலையில் சமீபத்தில் தனது வீடியோ ஒன்றில் பேசிய பத்திரிக்கையாளர் பிஸ்மி, இது குறித்து ஒரு புதிய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.

ரெட் ஜெயன்ட்டை தவிர்க்கும் ரஜினிகாந்த்
“ரஜினிகாந்த் சுயசரிதை எழுத 6 மாதங்கள் எடுத்துக்கொள்வதற்கு பின்னால் இன்னொரு விஷயம் இருக்கிறது. மேலோட்டமாக பார்த்தோமானால் ரஜினிகாந்த் சுயசரிதைக்காக இடைவெளி எடுத்துக்கொள்வது போல் தோன்றும். ஆனால் உள்ளுக்குள் இன்னொரு காரணமும் இருக்கிறதாம்.
அதாவது ரஜினிகாந்திடம் கால்ஷீட் கேட்டு பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் அணுகி வருகின்றனர். அதில் ரெட் ஜெயன்ட் நிறுவனமும் ஒன்று. ரெட் ஜெயன்ட்டை நேரடியாக தவிர்ப்பதற்கு ரஜினிகாந்திற்கு சங்கடமாக இருக்குமோ? இல்லையா? என்பது தெரியவில்லை. இப்போது இந்த 6 மாதத்தை சுயசரிதை எழுதுவதற்காக கடத்திவிட்டால் ரெட் ஜெயன்ட் நிறுவனத்தை தவிர்த்துவிடலாம் அல்லவா” என்று கூறியுள்ளார்.
மேலும் பேசிய பிஸ்மி, “ரஜினிகாந்த் ரெட் ஜெயன்ட் நிறுவனத்தை தவிர்ப்பதற்கான காரணம் என்னவென்றால், ரஜினிகாந்த் மனரீதியாகவே பாஜகவின் பக்கம் உள்ள ஒருவர். ஆதலால் திமுகவோடு அவர் நெருக்கம் காட்டமாட்டார். இன்னொரு விஷயம் என்னவென்றால், தேர்தல் நேரத்தில் ரஜினிகாந்த் ரெட் ஜெயன்ட் நிறுவனத்தில் நடித்தார் என்றால் அதையே திமுக தனது பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தும். ரஜினி எங்கள் பக்கம் இருக்கிறார் என்று அவர்களது ரசிகர்களை நம்ப வைப்பார்கள். இந்த சங்கடங்களை தவிர்ப்பதற்காக தேர்தல் வரை ஓட்டிவிடலாம் என்று ரஜினிகாந்த் நினைக்கிறாரோ என்னவோ” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.