திமுக அரசுக்கு எதிராக பேசுவதால் என் மீது வழக்கு தொடுக்க சதி நடக்கிறது : எம்எல்ஏ பரபரப்பு புகார்!

Author: Udayachandran RadhaKrishnan
20 June 2025, 7:00 pm

வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்று
கே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை திறந்து வைத்தார் இந்த நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துறைமுருகன் பங்கு பெற்று குத்து விளக்கு ஏற்றி வைத்தார்.

மேலும் வேலூர் அணைக்கட்டு குடியாத்தம் கே வி குப்பம் சட்டமன்ற உறுப்பினர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு கல்லூரியை ஆய்வு செய்தார்.

பின்னர் கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகன் மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், கே.வி குப்பம் பகுதியில் மகளிர் கலைக்கல்லூரி வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தோம் ஆனால் தற்பொழுது இருபாலரும் பயிலும் கல்லூரியாக தமிழக அரசு கொடுத்திருக்கின்றார்கள்.

நாங்கள் கேட்டதை கொடுக்காமல் நாங்கள் கொடுத்ததை தான் வாங்க வேண்டும் என்று திணித்திருக்கிறார்கள் அதிலும் அவசர அவசரமாக ஐந்தாண்டு முடிகின்ற நேரத்திலே ஏதோ தொகுதிக்கு நாங்கள் கொடுத்திருக்கின்றோம்.

ஆகவே திமுக தான் இதை செய்தது. ஆகவே திமுகவிற்கு தான் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்ற கோணத்தில் இந்த கல்லூரி அறிவிப்பும் இந்த தொடக்க விழாவும் நடந்திருக்கின்றது. இது அரசு விழா போல் இல்லாமல் ஒரு கட்சி விழாவாக நடந்திருக்கின்றது.

சாதாரண பள்ளியில் இருக்கும் வசதி வாய்ப்பு கூட இந்த புதிய கல்லூரியில் இல்லை இது மகளிர் படிக்கக்கூடிய கலை கல்லூரி ஆக மட்டுமே இருக்க வேண்டும் இதை அரசு பரிசீலனை செய்து மாற்றி அமைத்து தர வேண்டும்.

மேலும் கே.வி குப்பம் தொகுதியில் பல்வேறு மக்கள் பிரச்சினைகள் உள்ளது அதை இந்த அரசு உடனே செய்து தர வேண்டும்.

தேர்தலுக்காகவும் மக்களை ஏமாற்றுவதற்காகவும் அவச அவசரமாக இது போன்ற நல திட்டங்களை கொடுத்து மக்களை ஏமாற்றுகின்ற சூழலாக தான் இந்த கல்லூரி கொடுத்திருக்கின்ற நடவடிக்கை ஆக உள்ளது

மாங்காய் விவசாயம் குறித்து அமைச்சிடம் கேள்வி கேட்டபோது அவர் எந்த ஒரு பதிலும் தெரிவிக்கவில்லை இது குறித்து உங்கள் கருத்து என்று கேட்ட கேள்விக்கு

இந்த அரசை விவசாயிகள் மட்டும் குற்றம் சாட்டுகிறார்கள் என்று தெரிவிக்க முடியாது தமிழகத்தில் உள்ள அனைத்து துறை சார்ந்தவர்கள் இந்த அரசை குற்றச்சாட்டுகின்றனர் விவசாயிகள் என்றாலும் நெசவாளர்கள் என்றாலும் யாராக இருந்தாலும் அவர்களுடைய கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு பணி செய்வது அரசுடைய கடமை.

நான் சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையிலே எந்த விவசாய அமைப்பும் என்னிடம் வந்து கோரிக்க வைக்கவில்லை அப்படி வைத்திருந்தால் நான் கண்டிப்பாக ஆந்திர மாநிலத்திற்கு சென்று அந்த பகுதியில் உள்ள அமைச்சரையோ மாவட்ட ஆட்சியரையோ தொடர்பு கொண்டு விவசாயிகளுக்காக போராடி இருப்பேன் ஆனால் இந்த தொகுதியின் உடைய அமைச்சர் இந்த பிரச்சினையை தன்னுடைய பிரச்சனையாக நினைத்து பேசி முடித்திருக்க வேண்டும் ஆனால் அதை பேசாதது வருத்தம் அளிக்கிறது.

தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரமும் இருக்கின்றது காவல் நிலையத்தை சூறை ஆடுகின்ற சூழ்நிலையும் இருக்கின்றது தமிழகத்தில் சட்ட ஒழுங்கு முழுமையாக கெட்டுப் போய் உள்ளன ஆகவே மக்கள் இந்த அரசின் மீது அதிருப்தியாக இருப்பது உண்மை.

நான் தமிழக அரசுக்கு எதிராக சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் அரசுக்கு எதிர்ப்பாக பேசி வருகிறேன் மக்கள் கோரிக்கைக்காக பேசி வருகிறேன் ஆதலால் அரசு தாழ்ப்புணர்ச்சியோடு ஏதாவது ஒரு குற்றச்சாட்டை என்மீது சுமத்தி என்னை சிக்க வைக்க வேண்டும் என்று நினைக்கின்றனர் ஆனால் அதற்கு உயர் நீதிமன்றம் ஒரு சில கருத்துக்களை தெரிவித்து இருக்கின்றது.

ஆனால் என் மீது தவறாக கருத்து தெரிவித்த நீதிபதி மாற்றப்பட்டிருக்கிறார் மேலும் மற்ற விஷயங்களை நான் நீதிமன்றத்தில் தெரிவித்து இருக்கின்றேன் நாங்கள் சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்கள் நீதிமன்றம் என்ன முடிவெடுத்தாலும் நாங்கள் ஏற்றுக் கொள்வோம்

நான் தீவிரவாதியா அல்லது பயங்கரவாதியா தமிழகத்தில் உள்ள காவல்துறையினர் தீவிரவாதிக்கும் பயங்கரவாதிக்கும் ஆதரவு கொடுக்கின்றனர் டாஸ்மார்க் ஊழலில் ஆயிரம் கோடி கொள்ளை அடித்தவனுக்கு காவல்துறையினர் சல்யூட் அடித்து விமானத்தில் ஏற்றி அனுப்புகின்றனர்.

இதையெல்லாம் கண்டுக்காத காவல்துறை மற்றும் தமிழக அரசு எந்த பிரச்சினையும் இல்லாத ஒரு சாதாரண மனிதனிடம் இது போன்ற நெருக்கடியை கொடுப்பதற்கு காரணம் என்ன இது போன்ற நெருக்கடியை கொடுத்தால் எதிர்க்கட்சியில் இருந்து விலகி விடுவேன் இவர்களுடைய கூட்டணிக்கு வந்து விடுவேன் என்ற எண்ணங்கள் அவர்களுக்கு உள்ளது.

ஆகவே என்ன நடந்தாலும் நாங்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளோம் நீதிமன்றத்தை நம்பி இருக்கின்றோம் எந்த நிலையில் உண்மை வெளிப்படும் நாங்கள் நியாயத்தை எதிர்பார்க்கின்றோம் ஆகவே இந்த மிரட்டலுக்கெல்லாம் நானும் என்னுடைய இயக்கத்தைச் சார்ந்தவர்களும் அடிபணிய மாட்டோம் என்று தெரிவித்தார்

  • why police did not arrested virat kohli for 11 death in rcb celebration அல்லு அர்ஜூனை கைது பண்ணீங்க, விராட் கோலியை கைது பண்ணீங்களா? கிடுக்குப்பிடி கேள்வி கேட்ட கூல் சுரேஷ்
  • Leave a Reply