இஸ்ரேல் – ஹாமாஸ் போர் எதிரொலி ; விண்ணை முட்டும் தங்கத்தின் விலை ; ஒரே நாளில் உச்சத்தை தொட்ட தங்கம் …!!

Author: Babu Lakshmanan
7 October 2023, 5:04 pm
Gold Rate - Updatenews360
Quick Share

இஸ்ரேல் – ஹாமாஸ் போர் எதிரொலி ; விண்ணை முட்டும் தங்கத்தின் விலை ; ஒரே நாளில் கிடுகிடுவென அதிகரிப்பு…!!

பங்குச்சந்தை வீழ்ச்சி அடையும்போது, தங்கத்தின் விலை உயருகிறது. அதற்கு காரணம், பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள், அதை மாற்றி தங்கத்தில் முதலீடு செய்வதுதான். உதாரணமாக கடந்த ஆண்டு ரஷியா – உக்ரைன் போர் நடந்தபோது, பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி அடைந்தது.

அதன் தாக்கம் தங்கத்தில் எதிரொலித்தது. அதாவது தங்கத்தின் விலை ‘கிடுகிடு’வென உயர்ந்தது. ஒரு பவுன் (8 கிராம்) தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை கடந்து, இல்லத்தரசிகளை அதிர வைத்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்கம் விலை மேலும் அதிகரித்தது. கடந்த ஜனவரி 1-ந்தேதி, ரூ.41 ஆயிரத்தை கடந்த ஒரு பவுன் தங்கம் விலை, தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது.

ரூ.45 ஆயிரம், ரூ.46 ஆயிரம் என்று புதிய உச்சத்தை நோக்கி தங்கம் விலை (ஒரு பவுன்) உயர்ந்தது. இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டில், தங்கத்திற்கான இறக்குமதி வரியும் உயர்த்தப்பட்டது. இதனால், தங்கம் விலை மேலும் உயரும் வாய்ப்பு இருந்தது. இருப்பினும், தங்கம் விலை உயர்ந்தும், சரிந்தும் காணப்பட்டது.

இதையடுத்து, கடந்த சில தினங்களாக சரிந்து வந்த தங்கம் விலை, இன்று காலை உயர்ந்துள்ளது.  இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ரூ.42,440-க்கு விற்பனை செய்யப்பட்டது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ரூ.5,305-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதனிடையே, இஸ்ரேலில் ஹாமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். குண்டு மழை பொழிந்து வருவதால், அந்நாட்டின் நகரங்கள் உருக்குலைந்து வருகின்றனர். இதனால், தங்கத்த்தின் விலை மாலையில் அதிரடியாக உயர்ந்துள்ளது.

மாலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 அதிகரித்து ரூ.42,960க்கும், கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ரூ. 5,370க்கும் விற்பனை செய்யப்படுகிறது. காலையில் விற்பனையான விலையை விட தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 அதிகரித்தது

 

Views: - 4853

1

2