இறந்த தோழியின் பிணத்தை சுற்றி ஆணுறை… சித்ராவின் மரணத்தில் ரேகாவுக்கு தொடர்பு? பூதாகரத்தை கிளப்பிய பயில்வான்!

Author: Shree
23 June 2023, 6:20 pm
chithra death
Quick Share

விஜே சித்ரா என மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகை சித்ரா பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பேமஸ் ஆனார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி சீரியல் ஷூட்டிங்குக்காக பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் மரணம் பல்வேறு சந்தேகங்களை கிளப்பிய நிலையில் இதுகுறித்து சித்ராவின் தந்தையான ஓய்வுபெற்ற எஸ்.ஐ. காமராஜ் நசரேத்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

அதன் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதோடு, சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவா் ஹேம்நாத்தை கைது செய்தனா். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த ஹேம்நாத் சில தினங்களுக்கு முன் திடுக்கிடும் தகவல் ஒன்றை தெரிவித்தார். அதன்படி சித்ராவின் மரணத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது இந்த மர்ம மரணத்தை குறித்து பேசியுள்ளாள் பயில்வான் ரங்கநாதன், சித்ராவின் நெருங்கிய தோழியான ரேகா நாயர், அவரது மரணத்தை கேள்விப்பட்டு நான் உடனே அந்த ஹோட்டல் அறைக்கு சென்று பார்த்தபோது அந்த அறை முழுக்க ஆணுறை நிறைய கொட்டி கிடந்தது என கூறி பரபரப்பை கிளப்ப உடனே எல்லா யூடுயூப் சேனல்களும் ரேகாவை பேட்டியெடுக்க முந்தியடித்தனர்.

ஆனால் சித்ராவுக்கும் உனக்கும் என்ன தொடர்பு? என்பதை பற்றி யாரும் கேள்வி கேட்கவில்லை. ஒருவேளை ரேகாவுக்கு அந்த மரணத்தில் ஏதேனும் தொடர்பு இருக்குமோ? அதனால் அவர் பேட்டிகளில் சித்ரா குறித்த கேள்வி எதுவும் கேட்காதீர்கள் என சொல்லியிருக்கலாம். ஆனால், இனிமேல் கேட்டகனும், கேட்பார்கள் என பயில்வான் பகீர் கிளப்பியுள்ளார்.

Views: - 383

1

0