இப்படியா நடந்துக்கொள்வது….? நட்சத்திர ஓட்டல் மீது நடிகை ஸ்ரேயா சரண் பரபரப்பு புகார்!

Author: Shree
5 April 2023, 4:06 pm
shriya
Quick Share

தமிழில் எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தில் மூலம் அறிமுகமாகி பின்னர் மழை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக நடிக்க தொடங்கியவர நடிகை ஸ்ரேயா சரண். நல்ல அழகு துரு துரு நடிப்பு என அறிமுகமான புதிதிலே அத்தனை ரசிகர்களையும் வளைத்துவிட்டார்.

தெலுங்கு , தமிழ் , மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் ஹிட் திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றுள்ளார். இதனிடையே திடீரென 2018 ஆம் ஆண்டு உருசியாவைச் சேர்ந்த தொழிலதிபரும், டென்னிசு வீரருமான ஆன்ட்ரி கொஸ்சீவை காதலித்து ரகசியத் திருமணம் செய்துக்கொண்டார்.

இவர்களுக்கு ராதா என்ற பெண் குழந்தை உள்ளது. தொடர்ந்து நடித்து வருகிறார். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான ஆர்.ஆர்.ஆர், கப்சா ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில் தற்போது மகாராஷ்டிராவில் உள்ள பிரபல நட்சித்திர ஹோட்டல் மீது நடிகை ஸ்ரேயா சரண் பரபரப்பு புகார் ஒன்றை கூறியுள்ளார்.

அதில் பறவைகள் துன்புறுத்தப்படுவதாக குறிப்பிட்டுள் அவர் , “நீங்கள் பறவைகள் ஆர்வலராக இருந்தால் அவற்றை இப்படி சிறைப்பிடித்து வைக்கக்கூடாது. பறவைகள் சுதந்திரமாக இருக்க வேண்டும். ஒரு சிறிய கூண்டில் இத்தனை பறவைகளா? இப்படி பறவைகளை கூண்டில் அடைத்து வைத்திருப்பது சட்டப்பூர்வமானதா?

பறவைகளை நட்சத்திர ஓட்டல் மற்றும் வீடுகளில் கூண்டில் அடைத்து பொறுப்பற்ற முறையில் வளர்க்கிறார்கள். இது மனிதாபிமானமற்ற செயல். செல்லப்பிராணிகள் வளர்க்க ஆசைப்பட்டால் அவற்றை மூச்சுத்திணறும் கூண்டில் அடைக்காமல் அவற்றுக்கு தனி இடத்தை ஏற்பாடு செய்யவேண்டும்” என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு புகார் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/CqcqGL2SgBv/

Views: - 318

0

0