பொன்னியின் செல்வன் Reflection… அழுதுகொண்டு வெளியேறிய ஐஸ்வர்யா லட்சுமி!

Author: Shree
28 April 2023, 2:53 pm

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் 1950 முதல் 1955-ஆம் ஆண்டு வரை கல்கி வார இதழில் தொடர்கதையாக வெளியிடப்பட்டது. இது மக்களை வெகுவாக கர்ந்ததால் நான்குமுறை கல்கி வார இதழிலேயே மீண்டும் தொடராக வெளிவந்தது. இதற்கு இருந்து பேராதரவை வைத்து
1954-ல் புத்தகமாக வெளியிடப்பட்டது.

தற்போது அந்த புத்தகத்தின் அடிப்படையாக திரைப்படமாக மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானது. இதில் விக்ரம் ஆதித்த கரிகாலனாக, கார்த்தி வந்தியத்தேவனாக, ஜெயம் ரவி அருண்மொழி வர்மனாக, ஐஸ்வர்யா ராய் நந்தினியாக, திரிஷா குந்தவையாக, பிரகாஷ்ராஜ் சுந்தரசோழனாக, சரத்குமார் பெரிய பழுவேட்டரையராக, பார்த்திபன் சின்ன பழுவேட்டைரையராக நடித்துள்ளார்.

மிகப்பெரும் பொருட்செலவில் உருவான இதன் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியானது. அதன் தொடர்ச்சியாக 2ம் பாகம் இன்று வெளியாகியுள்ளது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் இப்படத்தில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமி நிகழ்ச்சி ஒன்றில்,

ponniyin-selvan

”படப்பிடிப்பில் நான் டென்ஷனாகும் போதெல்லாம் ஜெயம் ரவி அதனை நகைச்சுவையாக மாற்றிவிடுவார். திரிஷாவிடம் நீங்கள் எப்படி இவ்ளோ அழகா இருக்கீங்க என்று கேட்டுக்கொண்டே இருப்பேன். இப்படிப்பட்ட ஒரு வாய்ப்பை கொடுத்ததற்கு மணிரத்னம் சாருக்கு நன்றி என பேசிக்கொண்டிருக்கும்போதே உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கி அழுதுவிட்டார். பின்னர் விஜே அஞ்சனா , திரிஷா உள்ளிட்டோர் அவருக்கு ஆறுதல் கூறினார்கள். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?