பவதாரிணியின் கடைசி நாட்களிலும் இளையராஜாவுக்கு பணத்தாசை போகல.. சர்ச்சையை கிளப்பிய பயில்வான்..!

Author: Vignesh
29 January 2024, 5:13 pm
Bhavatharini
Quick Share

தமிழ் சினிமாவின் தலைமுறைக்கும் பேசும், பேசப்போகும் இசை அரசனாக பார்க்கப்படுபவர் இசைஞானி இளையராஜா. இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் 1000த்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குறையாமல் வழங்குவதில் அவர் ஞானி.

bhavatharani

இனிமையான பாடலுக்கு கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்துயிருக்கும் இளையராஜாவுக்கு கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா , பவதாரிணி என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் பவதாரிணி பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் இருந்து வந்தார். இசை நிகழ்ச்சிக்காக இளையராஜா கடந்த 24ம் தேதி கொழும்பை வந்தடைந்தார். இதனிடையே, பவதாரணிக்கு சமீபத்தில் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, பவதாரணி கொழும்பு லங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில், வியாழக்கிழமை மாலை அவர் உயிரிழந்தார். புற்றுநோயுடன் திடீர் மாரடைப்பு ஏற்பட்டதே உயிரிழப்புக்கான காரணம் என மருத்துவமனை கூறியது.

bhavatharani

இந்நிலையில் பவதாரிணி குறித்து பிரபல விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் பேசுகையில், பவதாரிணி கடைசி நாட்களை எண்ணிக்கொண்டிருந்த நேரத்தில் இளையராஜா ஸ்ரீலங்காவில் கச்சேரி வைத்திருக்கக் கூடாது. தன்னுடைய மகள் இந்த நிலைமையில் இருக்கும்போது இப்படி ஒரு கச்சேரி அவசியம் தானா? இதிலிருந்து என்ன தெரிகிறது இளையராஜாவுக்கு பணத்தை அதிகமாக இருக்கிறது என்று தெரிகிறது என பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார்.

bayilvan-ranganathan

ஆனால், பவதாரிணி இலங்கையில் மருத்துவ சிகிச்சைக்காக தான் சென்றார் என்பது எல்லோருக்கும் தெரிந்தது. அதற்கு ஏன் பயில்வான் இப்படி பேசுகிறார் என ரசிகர்களும் பயில்வானை கண்டபடி கடுமையாக திட்டி தீர்த்து வருகின்றனர்.

Views: - 180

0

0