“வாழ்க்கையில் நான் நம்பிய 3 பேரும் ஏமாத்திட்டாங்க”.. மனம் உடைந்து பேசிய நடிகர் தனுஷ்..!

Author: Vignesh
8 March 2023, 12:30 pm

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் திரைப்படங்களில் நடிகனாக நடித்து அறிமுகமாகி தற்போது பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என பல பரிமாணங்களில் தன்னுடைய திறமையை வெளிக்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் நடிகர் தனுஷ் இந்திய சினிமாவை தொடர்ந்து ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இதனிடையே, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் தனுஷ் மனம் உடைந்து பேசி உள்ளார்.

அதாவது, நடிகர் தனுஷ் ஒரு சேனலுக்கு பேட்டி கொடுத்த போது, அவர் பேசுகையில், தன் வாழ்க்கையில் பலரை நம்பி தான் மோசமாயிட்டேன் என்றும், தன் நம்பிக்கைக்கானவர்களில் 4 நபர்கள் இருந்ததாகவும், அதில், 3 பேர் தன்னை ஏமாற்றிவிட்டார்கள் என்றும், தன்னை ஏமாற்றாத ஒரே ஆள் யாரென்றால் அது வெற்றி மாறன் தான் எனவும், சிலர் பெரிய வெற்றிகளை கண்டவுடன் தன்னை தவித்துவிட்டதாகவும், பெரிய வெற்றிகளை பார்த்தபிறகும் தன் கூடவே இருப்பவர் இயக்குனர் வெற்றிமாறன் மட்டும்தான் என்று நடிகர் தனுஷ் அந்த பேட்டியில் மனம் வருந்தி தெரிவித்துள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!