நமக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை..! ஒதுங்கிப் போகும் இயக்குனர் பாலா..!

Author: Rajesh
16 February 2022, 4:24 pm
Quick Share

சேது திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் பாலா. தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களை உருவாக்கி தந்த பெறுமை இவரைச் சேரும். விக்ரம் என்ற மாபெரும் கலைஞனை சேது திரைப்படத்தில் உருவாக்கி, நந்தா திரைப்படத்தின் மூலம் இன்று ஆஸ்கார் விருது வரை செல்லக் கூடிய அளவிற்கு சூர்யாவின் நடிப்பின் திறமையை வெளிஉலகிற்கு கொண்டு வந்தவர் தான் இந்த பாலா.

நான் கடவுள் திரைப்படத்தின் மூலம் தேசிய விருதையும் பெற்றார். பெரும்பாலும் இவரது படங்கள் அனைத்து விளிம்பு நிலை மக்களைப் பற்றி பேசுவதாகவே இருக்கும்.
இவருடைய படங்களில் ஹீரோ, ஹீரோயின்கள் அழகாக இருக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. ஏனென்றால் இவர் படத்தில் நடிகர், நடிகைகளை அடையாளமே தெரியாத அளவுக்கு மாற்றிவிடுவார்.

நடிகர்களிடம் திறமையான நடிப்பை வாங்குவதில் கைவந்த இயக்குனரான இவர், சில சமயங்களில் நடிகர்களிடம் இருந்து வேலை வாங்கும் பொழுது கொஞ்சம் கோபப்பட்டு கைநீட்ட கூடியவர் என்றும் தெரிகிறது. பாலாவிடம் அடிவாங்கி வளர்ந்த நடிகர்கள் ஏராளம். தற்போது உள்ள சூழ்நிலையில், ஹீரோக்களை வைத்து படங்களை இயக்கினால் இதுபோன்று அவர்களிடம் வேலை வாங்க முடியாது. சில சமயங்களில் கோபப்பட்டு கையை நீட்டினால் அதுவே பெரிய சர்ச்சையாக மாறிவிடும். இதனாலேயே பாலா சினிமாவில் மிகப் பிரபலம் ஆகாத திறமையான நடிகர்களை வைத்து படங்களை இயக்கி வருகிறார் என்றும் தெரிகிறது.

இதனிடையே தற்போது பாலா பாலா பெரிய ஹீரோக்களை வைத்து எடுத்தால் அது அவர்களின் படமாக மாறிவிடும் என்பதால், பாலா முன்னணி ஹீரோக்களின் படங்களை இயக்க தயங்குகிறார் என்ற தகவலும் பரவி வருகிறது.

Views: - 1150

0

0