ஸ்ரேயா கோஷலிடம் அநாகரிகமாக நடந்துக்கொண்ட இளையராஜா – முகத்திரையை கிழித்த பிரபலம்!

Author: Shree
28 July 2023, 10:07 am
shreya ghoshal ilayaraja - update news360
Quick Share

தமிழ் சினிமாவின் தலைமுறைக்கும் பேசும், பேசப்போகும் இசை அரசனாக பார்க்கப்படுபவர் இசைஞானி இளையராஜா. இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் 1000த்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குறையாமல் வழங்குவதில் அவர் ஞானி.

இனிமையான பாடலுக்கு கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்துயிருக்கும் இளையராஜா பேச ஆரம்பித்தாள் எல்லோரும் முகம் சுளிக்கப்படி அடுத்தவர்களை பற்றி மோசமாக மரியாதை இல்லாமல் இழிவாக நடந்துக்கொள்வார். சமீப காலங்களில் அதிக சர்ச்சைகளில் இசைஞானி சிக்கி வருகிறார். அத்திமட்டுமல்லாமல் தன்னை தவிர யாரும் திறமை இருப்பவர்கள் கூட வளரக்கூடாது என கீழ்த்தரமான எண்ணம் கொண்ட மட்டமான மனிதர் இளையராஜா என பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த் சில நாட்களுக்கு முன்னர் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

அந்தவகையில் அண்மையில் மறைந்த நடிகர் மனோபாலாவுக்கு அஞ்சலி செய்தி வெளியிட்ட அவர் தற்பெருமை பேசி விமர்சனத்திற்கு உள்ளானார். மேலும் இளையராஜா தனது நெருங்கிய நண்பரான மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவன் உயிர் போகும் தருவாயில் கூட அவரை சென்று பார்க்கவில்லை. மலேசியா வாசுதேவன் அந்த ஏக்கத்தில் உயிர்விட்டார். அதோடு, இளையராஜா தன் உடன் பிறந்த தம்பி கங்கை அமரன் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆன அவரது வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டு தடுத்தார்.

அதுமட்டும் அல்லாமல், இளையராஜா ஏஆர் ரஹ்மானின் வளர்ச்சியை பார்த்து பொறாமைப்பட்டு அவர் எங்க வளர்ந்திடுவாரோ என்ற ஒரு வித பயத்தில் அவரது வளர்ச்சியை பலகோணங்களில் தடுத்து நிறுத்தியிருக்கிறார். மேலும் பல மேடைகளில் சக திரைத்துறை பிரபலங்களை இழிவுபடுத்தும் வகையில் பேசி அவமதித்திருக்கிறார்.

வளரும் இசைக்கலைஞர்களை அவர் வளரவே விடமாட்டார். காரணம் யார் ஒருவரும் தன்னை தாண்டி பேசப்படவே கூடாது என கெட்ட எண்ணம் கொண்டிருப்பார். அவ்வளவு ஏன் பெற்ற மகன் கார்த்திக் ராஜா இசைமைத்த பாடலில் கூட அவருக்கு கிரடிட்ஸ் கொடுக்காமல் தன் பெயரை போட்டுக்கொண்ட சுயநலவாதி இளையராஜா. இப்படி தொடர்ந்து இளையராஜா மீது பலர் பிரபலங்கள் அடுக்கடுக்கான புகார்களை கூறியிருந்தார்கள்.

இந்நிலையில் தற்போது பேட்டி ஒன்றில் மீண்டும் இளையராஜா குறித்து பேசியுள்ளார் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்த், ” இளையராஜாவுக்கு தலைக்கனம், ஆணவம் அதிமாக இருக்கிறது. அப்படித்தான் ஒரு கச்சேரியில் பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல், ” காற்றே எந்தன் தீபம் பாடலை பாடும்போது “தேடுதே என்று பாடுவதற்கு பதில் தோடுதே என்று ” தவறான உச்சரிப்புடன் பாடியிருக்கிறார். அத்தனை கேட்டு இளையராஜா ” திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது என்று மேடையிலே விமர்சித்தார். அதற்கு அங்கிருந்தவர்கள் கைதட்டி சிரிக்கிறார்கள்.

நான் ஒன்னு கேக்குறேன், ஸ்ரேயா கோஷல் ஒரு பெங்காலி அவருக்கு தமிழ் தெரியாது. இந்தி பாடல்கள் பாடும் பாடகி அவர். அவரை அழைத்துவந்து பாட வைக்கும்போது மொழி தெரியாமல் தவறு செய்தால் இப்படித்தான் தமிழில் கிண்டல் அடிப்பதா? அவருக்கு புரியும்படி ஆங்கிலத்தில் தவறை சுட்டிக்காட்டி திருத்த சொல்லியிருக்கலாமே? பொது மேடைகளில் சக கலைஞர்களை இப்படித்தான் இழிவுபடுத்துவதா? அது எவ்வளவு பெரிய மனிதாபிமான கொலை. எவ்வளவு தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறார் பாருங்கள் என கோபமாக பேசியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Views: - 422

0

0