பிரபல நடிகையின் தந்தை தற்கொலை!! அதிர்ச்சியில் இந்திய சினிமா!

Author:
12 September 2024, 9:32 am

இந்திய சினிமாவின் பிரபல நடிகையாக இருந்து வருபவர் தான் நடிகை மலாய்கா அரோரா. இவர் 90ஸ் காலகட்டத்தில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாகவும் வாலிப வட்டத்தின் கவர்ச்சி கன்னியாகவும் வலம் வந்து கொண்டிருந்தார்.

1998 ஆம் ஆண்டில் நடிகரும் இயக்குனருமான அரபாஸ் கான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிப்பில் அதிக கவனத்தை செலுத்தி தொடர்ச்சியாக பல வெற்றி திரைப்படங்களில் நடித்து வந்த மலாய்கா அரோராவுக்கு கடந்த 2002ம் ஆண்டு அர்கான் கான் என்ற ஒரு மகன் பிறந்தார்.

அதன் பிறகு கடந்த 2016 ஆம் ஆண்டு இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள். இதை அடுத்து மலையாக ரோரா பாலிவுட் சினிமாவின் இளம் நடிகரான அர்ஜுன் கபூருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து அவருடன் டேட்டிங் செய்து வந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு படுமோசமான விமர்சனத்திற்கு உள்ளாகி வந்தார்.

இந்நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் நடிகை மலாய்கா அரோராவின் தந்தை. அணில் அரோரா மும்பை மேற்கு பாந்த்ராவில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த நிலையில் இன்று காலை 9 மணி அளவில் 6-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

தகவல் அறிந்த போலீசார் உடனே அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். வணிக கப்பல் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருந்த அணில் அரோரா சமீப காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.

இதை அடுத்து அவரது இந்த திடீர் தற்கொலை முடிவு ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. மேலும் அவரின் உடலுக்கு பல நட்சத்திர பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். நடிகை மலாய் அரோரா பாலிவுட் சினிமாவின் நட்சத்திர நடிகர் ஆன ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த தில் சே திரைப்படத்தில் Chaiyya Chaiyya பாடலுக்கு ஓடும் ரயில் மீது நடனமாடியிருப்பார். இந்த பாடல் இன்று வரை ரசிகர்களின் பேவரைட் பாடலாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!