நயன்தாரா கூட பிறக்காத தங்கச்சி… பசங்களுக்கு நான் தான் தாய்மாமன் சீர் செய்வேன் – சந்தானம் நெகிழ்ச்சி!

Author: Shree
28 July 2023, 3:35 pm
nayanthara
Quick Share

தமிழ் சினிமாவின் டாப் நடிகையான நயன்தாரா மலையாள குடும்பத்தில் பிறந்து வளர்ந்து அங்குள்ள லோக்கல் சேனல் ஒன்றில் ஆங்கராக பணிபுரிந்து அதன் பின்னர் கிடைத்த படவாய்ப்புகளை மிஸ் பண்ணாமல் நடித்து மிகப்பெரிய மார்க்கெட் பிடித்து இன்று டாப் நடிகை என்ற அந்தஸ்தில் இருக்கிறார்.

முதன் முதலில் 2003 ஆம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார். தமிழில் அறிமுகமான முதல் படத்திலே பரவலான ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்துக்கொண்டார்.

தொடர்ந்து தமிழில் நடித்து சிறந்த கதைகளை தேர்வு செய்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடித்து முன்னணி நடிகையாக மார்க்கெட் பிடித்தார். இதனிடையே விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். நயன்தாராவுக்கு திருமணத்திற்கு பின்னர் தொழில் சார்ந்து பல சறுக்கல்களை சந்தித்து வருகிறார்.

அதன் பின்னர் தான் தற்போது ஜவான் படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த படம் மூலம் நயன்தாரா பாலிவுட்டில் அறிமுகமாகவிருக்கிறார். இதன் மூலம் அவருக்கு பாலிவுட்டில் ஒரு நல்ல ஸ்கோப் கிடைக்கும் எதிர்பார்க்கலாம். இந்நிலையில் விக்னேஷ் சிவன் அஜித்தை வைத்து இயக்கவிருந்த ஏகே 62 படத்தில் நடிகர் சந்தானம் முக்கிய காமெடி நடிகராக கமிட்டாகி இருந்தாராம்.

கதை சிறப்பாக இருந்தது. ஆனால் படம் கைவிட்டுவிட்டது என கூறிய சந்தானம், படத்தின் கதை கூற விக்னேஷ் சிவன் வீட்டிற்கு அழைத்தார். தடபுடல் விருந்து வைத்து நல்ல அனுசரிப்பு கொடுத்தனர். நயன்தாரா என்னை அண்ணா என்று தான் கூப்பிடுவார். வல்லவன் படத்தில் இருந்து எங்களது நட்பு ஆரம்பித்தது. பின்னர் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நடித்தபோது அண்ணா தங்கையாக பழகினோம். நயன்தாரா எனக்கு கூட பிறக்காத தங்கச்சி. வீட்டிற்கு சென்றபோது தான் பசங்களுக்கு என் மடியில் உட்காரவச்சி காத்து குத்துவியமா? என்று கேட்டேன். அப்படி நடந்தால் நான் நயன்தாரா பசங்களுக்கு தாய்மாமன் சீர் செய்வேன் என கலகலப்பாக பேசினார்.

Views: - 592

5

3