கடன் தொல்லையால் அதிர்ச்சி முடிவெடுத்த சிவகார்த்திகேயன் – ஆடிப்போன சினிமா வட்டாராம்!

Author: Shree
26 September 2023, 6:23 pm
sivakarthikeyan
Quick Share

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை நடிகர் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பெரிய விஷயம் என்று தான் சொல்ல வேண்டும். தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து பின்னர் உச்ச நடிகராக வளர்ந்து நிற்கிறார். எந்த ஒரு பின்புலனும் இல்லாமல், டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக வலம் வந்து முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார்.

sivakarthikeyan

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள சிவகார்த்திகேயன் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டு வெளியான மெரினா திரைப்படத்தில் நடித்து ஹீரோவாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தபடாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரஜினி முருகன், ரெமோ, டாக்டர் உள்ளிட்ட பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

நடிப்பையும் தாண்டி தொடர்ந்து தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி அதிலும் வெற்றி பயணத்தை துவக்கியுள்ளார். மேலும் பாடலாசிரியாகராகவும் வலம் வருகிறார். இப்படி தன் திறமையை வெளிப்படுத்தி பன்முக திறமை மூலம் வெற்றி கொடி நாட்டி வருகிறார்.இவர் கடந்த 2010ம் ஆண்டு தன்னுடைய மாமா மகளான ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கிறார்கள்.

Maan Karate Success Meet with Sivakarthikeyan, Hansika Motwani

சில தோல்விகள் கொடுத்தாலும் தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வரும் சிவகார்த்திகேயன் குறித்த ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆம், சிவகார்த்திகேயன் கோடி கணக்கில் கடனாளியாகிவிட்டாராம். அதனால் ரூ. 35 கோடி முதல் ரூ. 45 கோடி வரை சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த சிவகார்த்திகேயன் திடீரென ரூ. 70 கோடியாக தனது சம்பளத்தை உயர்த்தி விட்டாராம். காரணம் கடனை அடைக்க என தகவல்கள் கூறுகிறது. இதனால் கோலிவுட் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் அதிர்ந்துபோய்விட்டார்களாம். இதனை யூடியூப் பிரபலங்கள் கூறியுள்ளனர். இதோ அந்த வீடியோ:

Views: - 458

1

0