மனைவி பேச்சை கேட்டு பெற்றோர்களை கைவிடும் நட்சத்திர நடிகர்கள் – கோலிவுட்டில் தொடரும் குடும்ப பிரச்சனை!

Author: Shree
31 March 2023, 9:21 am
vijay
Quick Share

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக சூர்யா தற்போது மும்பையில் புதிய பிசினஸ், திரைப்படம் என அக்கட தேசத்தில் செட்டில் ஆகிவிட்டார். ஆம், சூர்யா மும்பை விமான நிலையத்தில் பார்க்கிங் ஏலம் எடுத்தார். அத்தோடு அங்கு சில வியாபாரங்களை கையில் எடுத்து வருமானம் சம்பாதித்து வருகிறார். அத்துடன் இந்திய அறிமுக படமொன்றில் நடித்து மெகா ஹிட் கொடுத்து பாலிவுட்டிலே செட்டில் ஆக திட்டமிட்டு விட்டாராம்.

இதையடுத்து சில தினங்களுக்கு முன்னர் சூர்யா தான் சூர்யா மும்பையில் பிரம்மாண்ட வீடு ஒன்றையும், ரூ. 68 கோடியில் சொகுசு பிளாட் ஒன்றை வாங்கி குடும்பத்தோடு செட்டில் ஆகியுள்ளார். இது எல்லாத்தையும் மாஸ்டர் பிளாட் போட்டு காரியத்தை முடித்ததே ஜோதிகா தானாம். இது எதுவுமே சூர்யாவின் அப்பா சிவகுமாருக்கு பிடிக்கவில்லையாம். ஜோதிகா மீண்டும் நடிப்பதில் அவருக்கு விருப்பம் இல்லையாம். இதை பல முறை சூர்யாவிடம் எடுத்துக்கூறியும் அவர் மனைவியின் கனவுகளை நிறைவேற்றுவதில் குறியாக இருந்து வந்துள்ளார்.

தன் பேச்சை காது கொடுத்து கூட கேட்கமாற்றான் என சூர்யா சிவகுமாருக்கு இடையில் மனஸ்தாபம் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் வீட்டை விட்டே சென்றுவிட்டார்களாம். இதே போல் தான் விஜய்யும் மனைவி சங்கீதா பேச்சை கேட்டு லண்டனில் புதிய தொழில்களில் முதலீடு செய்து வந்துள்ளார். இதை தட்டி கேட்ட தந்தை எஸ்ஏசி மற்றும் தாய் இருவரையும் உதறி தள்ளிவிட்டு பேச்சைவார்த்தை கூட இல்லாமல் விரோதிகளாக வாழ்ந்து வருகிறார்கள். இப்போது சூர்யாவும் இதே வேலையைத்தான் செய்துள்ளார். இது கோலிவுட்டில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 436

0

0