நீயெல்லாம் “நேர்கொண்ட பார்வை”யில் நடிச்சது தான் கொடுமை – பாலியல் குற்றவாளிக்கு சப்போர்ட் – லெஃப்ட் & ரைட் வாங்கிய சின்மயி!

Author: Shree
5 April 2023, 4:42 pm
abhirami
Quick Share

சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் ருக்மணி தேவி கலை கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலைகள் கற்றுத்தரப்படுகிறது.

இந்நிலையில் கலாஷேத்ரா சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்றால் ஆசிரியரின் விருப்பங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று பேராசிரியர்கள் கட்டாயப்படுத்துவதாகவும், பாலியல் சீண்டல்களை கொடுப்பதாகவும் அக்கல்லூரி மாணவிகள் புகார் அளித்தனர்.

ஆனால், கல்லூரி இயக்குனர் ரேவதி இராமச்சந்திரன் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் ஆத்திரமடைந்த மாணவிகள் கல்லூரி வளாகத்தின் வெளியே போராட்டத்திலும் ஈடுபட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்கள். பின்னர் இச்சம்பவம் பூதாகரமாக வெடித்தது.

இந்நிலையில் இது குறித்து பேட்டி அளித்துள்ள அக்கல்லூரியின் முன்னாள் மாணவியும் நடிகையுமான அபிராமி வெங்கடாச்சலம், “கலாஷேத்ரா என்ற பெயரை ஒழுங்காக சொல்லத் தெரியாதவர்கள் எல்லாம் இந்த கல்லூரியை பற்றி குறை கூறுவது ரொம்ப மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது.

10 வருடம் ஆக இந்த பிரச்சனை இருக்கிறது என்று சொல்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை. நானும் இந்த கல்லூரியில் படித்த முன்னாள் மாணவி தான். ஒரு பக்கம் இருக்கும் தரப்பை வைத்து மட்டும் பேசக்கூடாது. எந்த ஒரு பாலியல் தொல்லை நடந்தாலும் அந்த விஷயம் நடக்கும் போதே அதைப்பற்றி ஓபன் ஆக பேச வேண்டும். வளர்ந்து விட்டு ஏறி உக்காந்த பின்னர் ஓடுவது வேஸ்ட் என்றார் அபிராமி.

அவருக்கு பதிலடி கொடுத்துள்ள சின்மயி, ‘உண்மையை அப்போதே சொன்னாலும் தாமதமாக சொன்னாலும் அது உண்மைதான். நீங்கள் நம்பினாலும் அல்லது நம்பாவிட்டாலும் உண்மை தான். உண்மை பொய்யாகி விடாது என்று பதிவிட்டு இருக்கிறார் சின்மயி.

Views: - 409

1

1