ஒரு வழியாக வெளியானது பொன்னியின் செல்வன் -2 வின் ரிலீஸ்..! கிளைமேக்ஸில் மணிரத்னம் செஞ்ச மேஜிக்..!

Author: Vignesh
1 October 2022, 6:30 pm

சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. முதல் நாளிலேயே படத்தை பார்க்க டிக்கெட் கிடைக்காமல் பலரும் கடுப்பாகி உள்ளனர். அந்த அளவுக்கு டிக்கெட் புக்கிங் ஒரு வாரத்துக்கு ஏகப்பட்ட தியேட்டர்களில் ஹவுஸ்ஃபுல் ஆகி விட்டன.

பொன்னியின் செல்வன் கிளைமேக்ஸை செம ட்விஸ்ட் உடன் முடித்து அதன் 2ம் பாகத்திற்கு ரசிகர்களை வெறித்தனமாக வெயிட் செய்ய வைத்துள்ளார் மணிரத்னம்.

2 பாகங்களும் ஓவர் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களின் படப்பிடிப்பையும் ஒரே மூச்சில் 150 நாட்களுக்குள் முடித்து அசத்தி இருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். காட்சிகளின் பிரம்மாண்டத்துக்கு அதிகம் செலவு செய்யாமல், கதைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் மணிரத்னம். சிறப்பான நடிகர்கள் தேர்வு காரணமாக இத்தனை வேகமாக இரண்டு பாகங்களும் எடுத்து முடிக்கப்பட்டுள்ளன.

எதிர்பார்க்காத கிளைமேக்ஸ் ஆதித்த கரிகாலனை வைத்து கிளைமேக்ஸ் முடியும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், இயக்குநர் மணிரத்னம் சத்தமே இல்லாமல் டைட்டில் கேரக்டரை வைத்து முடித்திருப்பது ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்து விட்டது.

ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன், ஜெயராம் என அனைவரது நடிப்பும் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது. 2வது பாகம் எப்போ முதல் பாகத்தின் அந்த பயங்கர கப்பல் காட்சி சண்டை கிளைமேக்ஸ் முடிந்ததும் நிலவும் அமைதியுடன் அடுத்த பாகம் அடுத்த ஆண்டு 2023ம் ஆண்டே வெளியாகும் என்கிற சந்தோஷ செய்தியையும் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்கு ஆட செய்துள்ளார் இயக்குநர் மணிரத்னம்.

2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சம்மர் விடுமுறை கொண்டாட்டமாக பொன்னியின் செல்வன் 2ம் பாகம் வெளியாக உள்ளது. வசூல் சாதனை படைக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் சிறு குறைகள் இருந்தாலும், பெரிய அளவில் இயக்குநர் மணிரத்னம் எங்கேயும் சொதப்பிடவில்லை.

Maniratnam PS - Updatenews360

சோழர்களின் வரலாற்றை அப்படியே திரையில் படமாக காட்டியிருக்க நிறையவே அவர் மெனக்கெட்டு இருப்பது தெரிகிறது. ஆரம்பத்தில் சிஜி சொதப்பல்கள் இருந்தாலும், இலங்கையில் இருந்து அருள்மொழி வர்மனும் வந்தியத்தேவனும் திரும்பி வரும் கப்பல் சண்டைக் காட்சிகளில் சிஜி மிரட்டுகிறது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!