சிவகார்த்திகேயனிடம் அதை தெரிந்துக்கொள்ள ஆசை….Open’அ கூறிய கீர்த்தி சுரேஷ்!

Author:
26 September 2024, 3:16 pm

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஹீரோவாக இருந்து வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் திரை பின்பலம் எதுவுமே இல்லாத குடும்பத்தில் இருந்து வந்து தனது திறமையாலும் கனவாலும் இன்று திரைத்துறையில் நட்சத்திர நடிகராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். முதன் முதலில் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகம் ஆனார்.

sivakarthikeyan

இவர் தனது திறமையை கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படுத்தி காட்டியதன் மூலம் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் முதலில் 2012 ஆம் ஆண்டு மெரினா திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் சிவகார்த்திகேயன்.

மேலும் படிக்க: பல முறை சிவகார்த்திகேயனிடம் வாய்ப்பு கேட்டேன்… ஆனால், மேடையில் வருத்தப்பட்ட வடிவுக்கரசி..!

பின்னர் தனுஷ் உடன் 3 படம் அவருக்கு பெரும் புகழை பெற்று தந்தது. தொடர்ந்து மனங்கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் , ரஜினி முருகன், காக்கிசட்டை, மான்கராத்தே, வேலைக்காரன், நம்ம வீட்டு பிள்ளை, மாவீரன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து இன்று நட்சத்திர நடிகராக முன்னணி இடத்தை பிடித்திருக்கிறார்.

keerthi suresh - updatenews360

தற்போது சிவகார்த்திகேயன் அமரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வரும் அக்டோபர் 31ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் நடிகை சாய் பல்லவி சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து ஒரு விஷயத்தை கூறியிருக்கிறார்.

அதாவது சிவகார்த்திகேயன் ஒரு நடிகராக இருந்து கொண்டே தன்னுடைய வாழ்க்கையை எப்படி சமாளிக்கிறார்? எப்படி அதை எதிர்கொள்கிறார்? என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. மூன்று குழந்தைகளை எப்படி சமாளிக்கிறார் என்பதும் எவ்வளவு கலகலப்பாக அந்த குடும்பம் இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள மிகவும் ஆசையாக இருக்கிறது எனக்கு கீர்த்தி சுரேஷ் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!