அல்சர் முதல் உடல் சூடு வரை சுரைக்காயின் அற்புதமான மருத்துவ குணங்கள்!!!

Author: Hemalatha Ramkumar
13 May 2022, 5:24 pm
Quick Share

*சுரைக்காயில் அதிக நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் நிறைந்து காணப்படுகின்றது. சுரைக்காயினுடைய பாகங்கள் அனைத்துமே மருத்துவக் குணம் கொண்டவையாகும்.

* சுரைக்காயில் உள்ள சத்துக்கள்:
நீர்ச்சத்து – 96.07, இரும்புச்சத்து – 3.2, பாஸ்பரஸ் – 0.2, கார்போஹைட்ரேட் – 2.3, தாது உப்பு – 0.5, புரதம் – 0.3, சுண்ணாம்புச்சத்து, வைட்டமின்பி போன்ற சத்துக்கள் சுரைக்காயில் உள்ளன. இவை உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியவை.

*சுரைக்காயை கூட்டு, பொரியல், குழம்பு வைத்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும். சுரைக்காய் குடல் புண்களை ஆற்றும் மற்றும் பெண்களுக்கு ஏற்படக்கூடிய இரத்த சோகையை குணப்படுத்தி, இரத்தை சுத்திகரிக்கும்.

*உடல் சூடு காரணமாக கண் எரிச்சல், கண்வலி போன்றவை ஏற்பட்டால் சுரைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம்.

* உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சுரைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். சுரைக்காயை நன்கு அரைத்து அதில் ஒரு சிட்டிகை உப்பு, 1/2 டீஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து சரியான உடற்பயிற்சி செய்து வந்தால் நாளடைவில் உடல் எடை குறைவதை உணர்வீர்கள்.

*சிலருக்கு உணவுகளை மாறி சாப்பிடும் போதும் , மன அழுத்தத்தாலும் பித்தத்தின் நிலை அதிகரிக்கும்போது உடல் பலவீனமடைந்து பல நோய்கள் ஏற்படுகிறது . இந்த பித்தத்தைக் குறைக்க சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பித்தம் விரைவிலேயே குணமாகும்.

*சுரைக்காய் அதிகம் நார்ச்சத்து கொண்டது . குடலில் அல்சர் புண்கள் உள்ளவர்கள் தினமும் ஒரு வேளை சுரைக்காய் சாப்பிட்டு வந்தால் குடல் புண்கள் ஆறும். வயிற்றில் ஏற்படும் பாதிப்புகள், மலச்சிக்கல் போன்றவை தீரும். மேலும் மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்துவ உணவாக செயல்படுகிறது.

*சுரைக்காய் ஜூஸை குடிப்பதால் நாம் சாப்பிட கூடிய உணவுகள் அனைத்துமே எளிதில் ஜீரணம் அடையும்.

*சுரைக்காயில் அதிக நீர்ச்சத்து உள்ளது. ஆகவே சுரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிடுவதால் சிறுநீர் நன்கு வெளியேற உதவும். மேலும் சிறுநீர் குழாயில் உள்ள தொற்றுக்களை போக்கவும் உதவுகிறது.

*உணவில் அடிக்கடி சுரைக்காயை சேர்த்துக் கொள்வதால் கல்லீரலில் ‌உள்ள நச்சுத்தன்மை வாய்ந்த கிருமிகளை அழிக்கிறது.

*சுரைக்காய் விதைககள் மூலம் செரிமான மண்டலத்தை தூய்மைப்படுத்தலாம் என்றும் அதன் முலம் மலச்சிக்கலை தவிர்க்கலாம் என்றும் கூறப்படுகிறது. சுரைக்காயில் 80 சதவீதத்துக்கும் மேல் தண்ணீர் மட்டுமே இருப்பதால் அஜீரணம், மெட்டபாலிசம் போன்றவற்றைத் துரிதப்படுத்தலாம்.

*சுரைக்காய் ஜூஸ் சருமப் புற்றுநோய்க்கு தடுப்பு மருந்தாக கண்டறியப்பட்டு உள்ளது. புற்றுநோய் செல்களைத் தாக்கி அழிக்கவும் எதிர்த்துப் போராடவும் இந்த சுரைக்காய் உதவியாக இருக்கும்.

இவ்வளவு சத்துக்களும் , நன்மைகளும், மருத்துவ குணங்களும் உடைய சுரைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வோம்.

Views: - 877

0

0