ஒரே மாதத்தில் கழுத்து வலி, இடுப்பு வலியை குணமாக்கும் ஆசனம்!!!

Author: Hemalatha Ramkumar
21 January 2022, 9:57 am
Quick Share

நம்மில் பெரும்பாலோர் காலை நேரத்தை அவசரமாகத் தொடங்குகிறோம். காலை முதல் வேலைமாக மொபைலை எடுத்து பார்க்கிறோம். இருப்பினும், ஒருவரின் காலையைத் தொடங்க ஒரு சிறந்த வழி ஒரு எளிய நீட்டிப்பு பயிற்சிகள் ஆகும்.

அந்த வகையில் ஒருவர் ஏன் பலாசனம் அல்லது குழந்தையின் தோரணையுடன் நாளைத் தொடங்க வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.

விழித்த முதல் ஐந்து நிமிடங்களில் நீங்கள் என்ன செய்கிறீர்களோ, அது தான் உங்கள் நாள் மந்தமாக இருக்கப் போகிறதா அல்லது நிதானமான நாளாக இருக்கப் போகிறதா என்பதை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பாலசனம் செய்வது, (குழந்தையின் போஸ்), உங்கள் கணுக்கால், இடுப்பு மற்றும் தோள்களை நீட்டவும், உங்கள் உடலை நிதானப்படுத்தவும், செரிமானத்திற்குத் தயாராகவும் எளிதான வழியாகும்.

தூங்கி எழுந்த பிறகு தொலைபேசிக்கு பதிலாக ஒருவரின் அமைதியான சூழலை உணர வேண்டும். பின்னர் உங்கள் கண்களுக்கு மரங்கள், வானம் ஆகியவற்றின் அமைதியை பரிசளிக்கவும்.

பலாசனம் செய்வது எப்படி?
*உங்கள் பிட்டம் உங்கள் குதிகால் மீது இருக்கும் வகையில் முழங்கால்களை கீழே குனிந்து முன்னோக்கி வளைக்கவும்.

* மார்பை உங்கள் தொடைகளுக்கு கொண்டு வாருங்கள்.

*உங்கள் கையை படுக்கையில்/தரையில் வைத்து, உங்கள் நெற்றியை தரையில் தொட முயற்சிக்கவும்.

*இந்த நிலையைப் பிடித்து ஐந்து முதல் பத்து ஆழமான மூச்சை எடுக்கவும். பின்னர் அசல் நிலைக்கு திரும்பவும்.

பலாசனத்தின் வேறு சில நன்மைகள்:
* சோர்வைப் போக்க உதவுகிறது
* சுவாசத்தை சீராக்கி அமைதியை மீட்டெடுக்கிறது
*முதுகெலும்பை நீட்டவும் நீட்டிக்கவும் செய்கிறது
* கழுத்து மற்றும் முதுகு வலியை குறைக்கிறது
*பாயில் உங்கள் தலையை நீட்டுவது உங்களுக்கு சங்கடமாக இருந்தால் மென்மையான தலையணையை முயற்சிக்கவும்.
* உங்களுக்கு முழங்கால் காயங்கள் அல்லது வயிற்றுப்போக்கு இருந்தால் பயிற்சியைத் தவிர்க்கவும்.
* நீங்கள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தால், இந்த யோகாசனத்தை செய்வதைத் தவிர்க்கவும்.
*கர்ப்ப காலத்தில் தவிர்க்கவும்.

Views: - 3139

0

0