டீ, காபி குடிச்ச பிறகு தண்ணீர் குடிப்பது நல்லதா கெட்டதா???

Author: Hemalatha Ramkumar
25 October 2022, 1:56 pm

ஒரு கப் டீ அல்லது காபி குடித்த பிறகு தண்ணீர் குடிப்பது உங்களுக்கு நல்லதல்ல என்பதை நீங்கள் பலமுறை கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் அது உண்மையா? சூடான மற்றும் குளிர் பானங்களை ஒன்றாகக் கலப்பது நல்லதா? தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

தேநீர் அருந்திய பின் தண்ணீர் குடித்தால் என்ன ஆகும்?
காலையில் ஒரு கிளாஸ் சூடான தேநீர் அல்லது காபி குடித்து எழுவது பலரது பழக்கம். ஆனால் தேநீர் குடித்த பிறகு நீங்கள் தண்ணீர் குடிக்கக்கூடாது என்ற விஷயத்தை பலர் உங்களுக்கு அறிவுறுத்தி இருக்கலாம்.

இருப்பினும் தேநீர் அருந்திய பிறகு தண்ணீர் குடிப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது என்பதை நிரூபிக்கும் அறிவியல் சான்றுகள் எதுவும் இல்லை. எனினும், தேநீர் போன்ற சூடான பானத்தை அருந்திய உடனேயே தண்ணீரைக் குடிப்பது பையோரியா நோய் மற்றும் அமிலத்தன்மை அல்லது வலி போன்ற செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது.

டீ/காபிக்கு முன் தண்ணீர் அருந்தலாமா?
டீ அல்லது காபிக்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பதன் காரணம் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை குறைக்கிறது. தேயிலையில் தோராயமாக 6 என்ற (அமிலத்தன்மை) pH அளவு உள்ளது. அதே சமயம் காபியில் 5 என்ற அளவில் pH உள்ளது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், காலை அல்லது மாலை டீ அல்லது காபி குடிப்பது அமிலத்தன்மையின் அபாயத்தை அதிகரிக்கும் மற்றும் கடுமையான நோய்கள், அல்சர் மற்றும் புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.

தேநீர் அல்லது காபிக்கு முன் தண்ணீர் குடிப்பது வயிற்றில் அமில அளவைக் குறைக்க உதவுவதோடு, வயிறு மற்றும் ஒட்டுமொத்த உடல்நலக் கேடுகளையும் குறைக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதிக அமிலத்தன்மை இருப்பதால், இது பற்களில் தேநீரின் விளைவையும் குறைக்கிறது. குடிநீரானது உடலை நீரேற்றமாக வைத்திருக்கிறது மற்றும் மாசுகளை அகற்ற உதவுகிறது.

  • 5 consitions to aamir khan in the release of sitaare zameen par movie படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?