உடனடி புத்துணர்ச்சி பெற பிரியாணி இலையை இந்த மாதிரி கூட யூஸ் பண்ணலாம்… நீங்களும் தெரிஞ்சுக்கோங்க!!!

Author: Hemalatha Ramkumar
18 February 2023, 10:55 am

பிரியாணி இலைகளின் அசாதாரண மணம் மற்றும் சுவைக்காக இது பல விதமான உணவுகளில் சேர்க்கப்படுகின்றது. ஆனால் பிரியாணி இலைகளில் சுவை மட்டுமல்ல, பல ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. ஏனெனில் இது ஆக்ஸிஜனேற்ற மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

இதைத் தவிர, பிரியாணி இலைகள் காற்றில் புத்துணர்ச்சி சேர்க்கும் தன்மை கொண்டது மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. இது எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பார்ப்போம்!

பிரியாணி இலைகளை எரிப்பதால் வெளிப்படும் புகை, காற்றை புத்துணர்ச்சியடையச் செய்வதோடு, மனச்சோர்வை போக்கவும் உதவுவதால், இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பிரியாணி இலையில் யூஜெனால் மற்றும் மைர்சீன் ஆகிய இரண்டு கலவைகள் உள்ளன. இவை அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. இவ்வாறு, பிரியாணி இலைகளை எரிக்கும்போது கிடைக்கும் நறுமணம் நரம்புகளையும் மூளையையும் தளர்த்துகிறது. இதனால் பதற்றம் குறைகிறது. மேலும் இது குமட்டலைத் தடுக்கிறது. ஏனெனில் இது சுவாசக் குழாயில் உள்ள வீக்கத்தைக் குறைக்கிறது.

மேலும் இது மனச்சோர்வை குணப்படுத்த உதவுகிறது. எனவே, நீங்கள் எப்போதாவது மனச்சோர்வடைந்திருப்பதாக உணர்ந்தால், இந்த இலைகளில் ஒன்றிரண்டை எடுத்து, விளக்கை ஏற்றி 10 நிமிடங்கள் அப்படியே அதனை வாட்டவும். வித்தியாசத்தை நீங்களே உணருவீர்கள்! இருப்பினும், புகையை நேரடியாக உள்ளிழுப்பது நல்லதல்ல.

  • yogi babu explains about not attended gajaana audio release function பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!