தினம் ஒரு சப்போட்டா பழம் சாப்பிட இவ்வளவு காரணம் இருக்கா…???

Author: Hemalatha Ramkumar
17 April 2023, 1:43 pm

சப்போட்டா பழம் சதைப்பற்று நிறைந்த ஒரு சுவையான பழம் ஆகும். பிற பழங்களை வாங்கி சாபாபிடுவதைப் போல நாம் சப்போட்டா பழத்தை அதிக அளவில் சாப்பிடுவதில்லை. எனினும், இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளன. இது மட்டும் அல்லாமல் இது பலவிதமான நோய்களிலிருந்து நம் உடலை காப்பாற்றுவதன் மூலமாக நம் உடல் ஆரோக்கியத்திற்கு பங்களிக்கிறது.

சப்போட்டாவில் அதிக கலோரிகள் உள்ள காரணத்தினால் இது உடல் எடை அதிகரிக்க விரும்புவோருக்கு சிறந்தது. வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பொட்டாசியம், கால்சியம், மினரல்கள் நிறைந்த சப்போட்டா பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இப்போது பார்க்கலாம்.

சப்போட்டா பழம் டானின் என்ற கலவையின் சிறந்த ஆதாரமாக இருப்பதால் இது செரிமானத்திற்கு தேவையான அமிலத்தை உற்பத்தி செய்ய உதவுகிறது. மேலும் இதில் அதிகப்படியான டயட்ரி ஃபைபர்கள் இருப்பதால் இது மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகிறது.

எலும்புகளின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சிக்கு தேவையான பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து சப்போட்டா பழத்தில் அதிக அளவில் காணப்படுகிறது. இதனை அடிக்கடி உணவில் சேர்த்து வருவது எலும்பு பிரச்சனைகளை தடுக்க உதவும். தினமும் ஒரு சப்போட்டா பழம் சாப்பிட்டு வர கண் பார்வை தொடர்பான கோளாறுகளிலிருந்து தப்பிக்கலாம். சப்போட்டா பழத்தில் வைட்டமின் ஏ அதிக அளவில் இருப்பதால் இது கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இதன் காரணமாக வயதான காலத்திலும் தெளிவான கண் பார்வையை பெறலாம்.

சப்போட்டா பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்சிடன்டுகள் அதிக அளவில் காணப்படுகிறது. இது நமது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி நோய்களிலிருந்து நம்மை காப்பாற்றுகிறது. அதோடு உடலில் உள்ள கெட்ட நச்சுக்களை வெளியேற்றி உடலை சுத்தப்படுத்துகிறது.

சப்போட்டா பழத்தில் காணப்படும் ஆன்டி ஆக்சிடன்டுகள் புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் உள்ள அதிகப்படியான உணவு நார்ச்சத்து காரணமாக இது குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பினை குறைக்கிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!