வேம்பு: ஒரு பைசா செலவு இல்லாமல் கிடைக்கும் விலை மதிப்பில்லா இயற்கை மருந்து!!!

Author: Hemalatha Ramkumar
27 March 2023, 11:45 am

ஆயுர்வேத உலகில், வேம்பு முக்கியமான இடத்தைக் கொண்டுள்ளது. இது பல்வேறு பாரம்பரிய வைத்தியங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது (சுமார் 5000 ஆண்டுகளுக்கு மேலாக). இந்த மரம் பல்வேறு பிரச்சனைகளுக்கு மருந்தாக உள்ளது. 130 க்கும் மேற்பட்ட பல்வேறு உயிரியல் ரீதியாக செயல்படும் சேர்மங்களைக் கொண்ட இந்த மூலிகை பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு மற்றும் நோயெதிர்ப்பு-தூண்டுதலாக செயல்படுகிறது.

நரம்புத்தசை வலிகள் மற்றும் வாத நோய்களுக்கு சிகிச்சையளிக்க வேப்ப இலைகள் பயன்படுத்தப்படுகின்றன. அது போக, இரத்த சுத்திகரிப்பு, நச்சு நீக்கம், புண்கள் மற்றும் பூச்சி கடி போன்றவற்றிற்கும் சிகிச்சை அளிக்க உதவுகிறது. பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளுடன், இது தீக்காயங்கள், தொற்றுகள் மற்றும் தோல் பிரச்சனைகளை விரைவாக குணப்படுத்துகிறது. இது தொற்றுநோயை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழிக்கிறது. இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் விரைவான குணப்படுத்துதலுக்கு பங்களிக்கிறது.

தோல் பிரச்சினைகள் – வேப்ப இலைகளை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து பயன்படுத்த, அரிக்கும் தோலழற்சி, ரிங்வோர்ம் மற்றும் லேசான தோல் பிரச்சினைகள் குணமாகும்.

காது பிரச்சனைகள் – வேப்ப இலைகளை கலந்து தேன் சேர்த்து அதில் சில துளிகள் காதில் ஊற்ற பலன் கிடைக்கும்.

காயம் குணமாகும் – வேப்ப இலைகளைப் பயன்படுத்தி பேஸ்ட் செய்து, பூச்சி கடி அல்லது காயங்கள் மீது தடவவும் (குணமாகும் வரை தினமும் ஒரு சில முறை செய்யவும்).

கண் பிரச்சனைகள் குணமாக- வேப்ப இலைகளை கொதிக்க வைத்து, இந்த நீரை ஆற வைத்து, கண்களைக் கழுவ பயன்படுத்தவும். இது சிவத்தல், எரிச்சல் மற்றும் சோர்வு போக்க உதவுகிறது.

பொடுகு தொல்லையில் விடுபட – வேப்ப இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து தண்ணீர் பச்சையாக மாறும் வரை கொதிக்க விடவும். இதனை ஆற வைத்து, ஷாம்புக்குப் பிறகு தலைமுடியைக் கழுவுவதற்குப் பயன்படுத்தவும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க – சில வேப்ப இலைகளை நசுக்கி, ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து சாப்பிடவும். இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!