குளிர்காலத்தில் வெந்நீரில் தலைக்கு குளிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்!!!

Author: Hemalatha Ramkumar
28 December 2024, 3:57 pm

குளிர் காலத்தில் இருப்பதிலேயே கஷ்டமான ஒரு விஷயம் எதுவென்று கேட்டால் தலைமுடியை அலசுவது என்று கூறலாம். ஆனால் தலைமுடியை வெந்நீரில் அலசுவதால் நல்லதை விட கெட்டது அதிகமாக ஏற்படும் என்பது உங்களுக்கு தெரியுமா? வெந்நீர் தலைமுடி மற்றும் மயிர் கால்களில் உள்ள இயற்கை எண்ணெய்களை முழுவதுமாக அகற்றி, அதனை வறண்டு போக செய்து, எளிதில் உடைய கூடியதாக மாற்றிவிடும். எனவே உங்களுடைய தலைமுடியை அலசுவதற்கு வெந்நீரை தவிர்ப்பது மிகவும் நல்லது. வெந்நீர் தலைமுடியில் உள்ள தோல் பட்டைகளை திறக்க செய்து தலைமுடியை சேதம் மற்றும் எளிதில் உடைந்து போவதற்கு வழிவகுக்கிறது.

மேலும் வெந்நீர் பயன்படுத்தும் போது மயிர்க்கால்களில் எரிச்சல் ஏற்பட்டு, அதனால் பொடுகு மற்றும் அரிப்பு உண்டாகும். எனவே உங்களுடைய தலைமுடியை அலசுவதற்கு குளிர்ந்த நீர் அல்லது வெதுவெதுப்பான நீரை பயன்படுத்துவது சிறந்தது. எனவே இந்த பதிவில் தலைமுடிக்கு வெந்நீர் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்கவிளைவுகளை பற்றி ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

தலைமுடியின் தோல் பட்டை சேதம் 

வெந்நீர் தலைமுடியின் வெளிப்புற அடுக்கான தோல் பட்டையை சேதப்படுத்தி ,அதனால் தலைமுடி வலுவிழந்து, எளிதில் சேதமாவதற்கு காரணமாகிறது.

இதையும் படிக்கலாமே:  நொடிப்பொழுதில் தூக்கத்தை வரவழைக்கும் இரவு பானங்கள்!!!

மயிர் கால்களில் எரிச்சல்

தலைமுடிக்கு வெந்நீர் பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய பொதுவான பிரச்சனைகளில் இதுவும் ஒன்று. இந்த மயிர் கால்களின் எரிச்சலின் விளைவாக அரிப்பு மற்றும் பொடுகு வரலாம்.

தலைமுடி உதிர்வு 

வெந்நீரை பயன்படுத்தி தலைமுடியை அலசும் போது உங்களுடைய தலைமுடி டல்லாக, அதிக சிக்கு நிறைந்து, எளிதில் உடைய கூடியதாக மாறும். இதனால் உங்களுடைய தலைமுடி உடைந்து தலைமுடி உதிர்வு ஏற்படுகிறது.

இயற்கை எண்ணெய்கள் அகற்றப்படுதல்

அடிக்கடி தலைமுடியை வெந்நீரில் அலசுவதால் மயிர்க்கால்கள் மற்றும் தலைமுடியில் உள்ள இயற்கை எண்ணெய்கள் அகற்றப்பட்டு, அதனால் தலைமுடி வறண்டு, எளிதில் உடைய கூடியதாக மாறுகிறது.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!